நாகர்கோவில், ஜன.16- மதுகுடிக்க பணம் கேட்டு நடத்திய வெறி்த்தமனமான தாக்கு தலில் படுகாயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாக்குதலில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பல் தலைமறைவாகி உள்ளது. கருங்கல் அருகே பூவன்சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் பெயின்டர் சுரேஷ் குமார் (44). கடந்த 1-ஆம் தேதி கருங்கல் பேருந்து நிலை யம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு அதே பகுதி ஆர் சி தெருவை சேர்ந்த சுபாஷ் (30), ஜான் (37), ஜெனிபர் (32), அனஞ்சிக்கோடு பகுதியை சேர்ந்த மகேஷ் (35) உட்பட 5 பேர் கொண்ட கும்பல் சுரேஷ் குமாரை வழிமறித்து மது குடிக்க பணம் கேட்டுள் ளது. சுரேஷ்குமார் பணம் இல்லை என்று கொடுக்க மறுத்து விட் டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஐந்து பேரும் சேர்ந்து சுரேஷ்குமாரை சரமாரியாக தாக்கியுள்ள னர். இதில் சுரேஷ்குமா ருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதையடுத்து சுரேஷ்குமார் உறவி னர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கருங்கல் காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பல னின்றி திங்களன்று (ஜன. 15) காலை சுரேஷ்குமார் உயிரிழந்தார். இதை யடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி தலைமறைவான ஐந்து நபர்களையும் தேடி வருகின்றனர்.