கும்பகோணம், ஜூலை 31-
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் அடுத்த மனக்குன்னம் மேலத் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் (45). தொழிலாளி. இவருடைய எதிர் வீட்டில் வசிப்பவர் செந்தில்குமார் (41). இவருடைய வீட்டில் வளர்க்கப்படும் ஆடுகள் அடிக்கடி ராமலிங்கம் வீட்டுக்கு சென்று பூச்செடிகளை மேய்ந்து விடுவது வழக்கம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் ஞாயிறன்று ஆடுகள் மேய்ந்தபோது ராமலிங்கமும், அவருடைய மனைவி காந்திமதியும் செந்தில்குமாரிடம் சென்று, ஆடுகளை கட்டிப்போட்டு வளர்க்கும்படி கூறினர்.
இதில் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார், ராம லிங்கத்தை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக வும் கூறப்படுகிறது. பின்னர் கிராம மக்கள் சமாதானம் செய்து இருவரையும் அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து வயலுக்கு சென்ற ராமலிங்கம் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்த வர்கள் அவரை மீட்டு திருப்பனந்தாள் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து ராமலிங்கம் மனைவி வனிதா கொடுத்த புகாரின் பேரில் பந்தநல்லூர் காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் இதுதொடர்பாக செந்தில்குமாரை கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.