districts

img

திருச்சியில் நிவாரணம் கேட்டு சிபிஎம் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, செப்.13- திருச்சிராப்பள்ளி மாவட்டம் வடக்கு காட்டூர் குழந்தை ஏசு தெரு வைச் சேர்ந்தவர் டேவிட்ரகன் (38).  இவருக்கு நான்கு பெண் குழந்தை கள் உள்ளனர். டேவிட்ரீகன் ஆர்எம்எஸ் காலனி விரிவாக்கப் பகுதியில் உள்ள தனியார் கார்  மெண்ட்ஸ் கட்டிடத்தில் ஞாயி றன்று வேலை செய்து கொண்டி ருந்தார். அந்த கட்டித்தின் மேல் பகு தியில் சென்ற உயர்மின் அழுத்த  கம்பி டேவிட்ரீகன் மீது உரசிய தால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்  திலேயே உயிரிழந்தார். இந்த நிலையில் உயர் மின்சார கம்பிகளுக்கு கீழ் கட்டிடம் கட்ட முறைகேடாக அனுமதி வழங்கிய மாநகராட்சி அதிகாரிகள்- மின் இணைப்பு வழங்கிய மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை சம்  பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய வேண்டும். நான்கு பெண் குழந்தைகளை விட்டுவிட்டு உயிரிழந்த தொழி லாளி ரீகன் குடும்பத்திற்கு ரூ.25  லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவ ருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி டேவிட்ரீ கன் உடலை வாங்க மறுத்து மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யில் இரண்டு நாட்களாக போராட் டம் நடந்தது. இதைத் தொடர்ந்து வருவாய்  கோட்ட அலுவலர் தலைமையில் செவ்வாயன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மாநிலக்  குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர்  மாவட்டச் செயலாளர் ராஜா,  மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் வெற்றிச்செல்வன், ரேணுகா, லெனின், கார்த்திகேயன் மற்றும் டேவிட்ரீகன் குடும்பத்தினர் கலந்து  கொண்டனர். அப்போது வீட்டு உரிமையா ளர், இறந்த டேவிட்ரீகன் குடும்பத்தி னருக்கு நிவாரணமாக ரூ4 லட்சம் வழங்குவது. கோட்டாட்சியர் பரிந்துரைந்து மாவட்ட ஆட்சியர் மூலம் ரூ.2 லட்சம் நிவாரணம் பெற நடவடிக்கை எடுக்கப்படும். தவறான மின் இணைப்பு- கட்டிட அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக் கப்படும் என முடிவானது. இதை யடுத்து டேவிட்ரீகன் உடலை அவ ரது குடும்பத்தினர் பெற்றுக்கொண் டனர்.