districts

img

விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்,ஆக.

       23 கிராம ஊராட்சிகளில் 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும்.தினக்கூலியாக ரூ. 600 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் திரு வட்டார் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு புதன் கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.    

      போராட்டத்திற்கு வட்டா ரச் செயலாளர் ரத்தின குமார் தலைமை தாங்கினார். சுந்தரராஜ் துவக்கி வைத்தார்.இராஜகுமார் ,சிறீ குமார், டேவிட் ராஜ்,வில் சன், ஜோஸ் மனோகரன், ராஜசேகர், சகாய ஆன்றணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் என்.எஸ்.கண்ணன் சிறப்புரையாற்றி நிறைவு செய்தார்.திரளான விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.