districts

img

டெல்டா மாவட்டங்களில் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழா

மயிலாடுதுறை, செப்.15 - பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்.  மயிலாடுதுறை மாவட்டம், செம்ப னார்கோவில் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில்  நடைபெற்ற விழாவில், கலைஞர் மக ளிர் உரிமைத்தொகை திட்டத்தினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வெள்ளியன்று தொடங்கி வைத்து பயனா ளிகளுக்கு வங்கி பற்று அட்டையினை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி,  பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா  எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப் பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடு துறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜ குமார் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் அதற்கான வங்கி அடையாள அட்டை (ஏடிஎம் கார்டு) வழங்கும் விழா நடை பெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன், நாடாளுமன்ற உறுப் பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். விழாவில்  பெண்களுக்கு அடையாள அட்டையை வழங்கி, பள்ளிக் கல்வித்துறை அமைச் சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரையாற்றினார். தஞ்சாவூர் மாவட்டத்தில் 5,49,869 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளன. இதில் பெண்களுக்கு அவர வர் கொடுத்த வங்கிக்கு பணம் அனுப்பப் பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், மாநிலங்க ளவை உறுப்பினர் எஸ்.கல்யாண சுந்தரம் மற்றும் சட்டமன்ற உறுப்பி னர்கள், வங்கியாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

திருவாரூர்

இதையொட்டி, இத்திட்டத்தை திரு வாரூர் மாவட்டம் காட்டூர் கலைஞர் கோட் டத்தில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தொடங்கி வைத்து,  திரு வாரூர் மற்றும் குடவாசல் வட்டத்திற்குட் பட்ட இரண்டாயிரம் பெண்களுக்கு கலை ஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான பற்று  அட்டையினை வழங்கினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தி. சாருஸ்ரீ தலைமை வகித்தார். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலை வாணன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற  உறுப்பினர் க.மாரிமுத்து, மாவட்ட  ஊராட்சித் தலைவர் கோ.பாலசுப்ரமணி யன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை ஜெ.ஜெ. கல்லூரி யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, திருவரங் குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை (ஏடிஎம் கார்டு) வழங்கினர். திருமயம் வட்டத்தில் 3,391  மற்றும் ஆலங்குடி வட்டத்தில் 4,431 என மொத்தம் 7,822 மகளிருக்கு வங்கிப் பற்று அட்டைகள் வழங்கப்பட்டன.  இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சி யர் ஐ.சா.மெர்சி ரம்யா, மாநிலங்க ளவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சின்ன துரை (கந்தர்வகோட்டை), வை.முத்து ராஜா (புதுக்கோட்டை) உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருச்சிராப்பள்ளி திருச்சி மாவட்ட ஆட்சியர் வளா கத்தில் நடந்த விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலைஞர்  மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளுக்கு வங்கி பற்று அட்டையினை வழங்கினர். விழாவில், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், மாநகர காவல் ஆணையர் காமினி, மேயர் அன்ப ழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். கரூர் அட்லஸ் கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பயனாளிகளுக்கு வங்கிப் பற்று அட்டைகளை வழங்கினார். இதில்  கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ. ஜோதிமணி மற்றும் சட்டமன்ற உறுப்பி னர்கள் பங்கேற்றனர்.

நாகப்பட்டினம்

கலைஞர் உரிமைத் தொகை வழங்கும் விழா நாகப்பட்டினம் அரசு தொழிற்பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்றது. இதில் கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் நாகைமாலி, மாவட்ட  ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ், மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கௌத மன், நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், தாட்கோ தலைவர் உ.மதிவாணன், நாகை நகர்மன்றத் தலைவர் ஆர்.மாரிமுத்து  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.