districts

கடைமடைக்கு முறை வைக்காமல் தண்ணீர் வழங்க வலியுறுத்தல்

தஞ்சாவூர், ஆக.11-

       தமிழ்நாடு விவசாயிகள் சங்க, சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழு கூட்டம், பேராவூரணியில் நடைபெற்றது. விவ சாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் வீ.கருப்பையா தலைமை  வகித்தார். மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், தொழிற்சங்க தலைவர் ஆர்.மனோகரன், ஒன்றியச் செய லாளர் வி.ஆர்.கே.செந்தில்குமார், தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, கோரா ஆகியோர் பேசினர்.  

    இதில், 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட்  14 அன்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி  வரை, ‘விடியலை நோக்கி விவசாயிகள்’ என்ற கருத்த ரங்கம் பேராவூரணியில் நடத்துவது. பேராவூரணி, சேதுபாவா சத்திரம் கடைமடைப் பாசனத்திற்கு முறை வைக்காமல் தண்ணீர் விட வேண்டும். ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆக.29 அன்று திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது. விவசாயிகளின் அடிப்படை பிரச்சனைகளுக்காக போராட்டங்கள் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  

    இதில், விவசாயிகள் சங்கத்தின் சேதுபாவாசத்திரம் ஒன்றிய உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.