districts

img

அறுவடை செய்த நெல்லை எடுத்துச் செல்ல விடாமல் பாதையை மறித்து அராஜகம் சிபிஎம், விவசாயிகள் போராட்டம்

கும்பகோணம், ஆக.20 -

      தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பியம் மேலத் தெருவைச் சேர்ந்தவர் சிவசங்கரன். இவர்  சுமார் இரண்டு ஏக்கரில் நெல் பயிரிட்ட நிலை யில், போதுமான தண்ணீர் இல்லாமலும் அறு வடையின் போது பெய்த மழையினாலும் நெல் பாதிக்கப்பட்டது.

   இதில், எஞ்சிய நெல்லை அறுவடை செய்து டிராக்டர் மூலம் கொள்முதல் நிலை யத்திற்கு எடுத்துச் சென்றார். அப்போது வயலில் இருந்து நெல்லை எடுத்து வரா மல் இருப்பதற்காக, திருப்புறம்பியம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் கண்ணன் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த பாண்டி யன் ஆகியோர், இவர் வரும் பாதையில் குழி தோண்டி, வழியை மறித்தவாறு தனது ஜேசிபி  இயந்திரத்தை போட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

     இதனால் விவசாயி சிவசங்கரன் அறு வடை செய்த நெல்லை வெளியில் எடுத்து வர  முடியாமல் தவித்த நிலையில், தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் ஆதர வோடு, சங்க மாவட்டச் செயலாளர்  கண்ணன், சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், சி. ஜெயபால், அருளரசன், மாவட்டக் குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட  துணைத் தலைவர் கணேசன் மற்றும் விவசாய சங்க பொறுப்பாளர்கள் கும்பகோணம் வட்டாட்சியரை சந்தித்து இதுகுறித்து புகார் தெரி வித்தனர்.

   அதனடிப்படையில், ஜேசிபியை கொண்டு வழியை மறித்த கண்ணன்  மற்றும் பாண்டியன் ஆகியோர் உட னடியாக ஜேசிபி அப்புறப்படுத்த வேண் டும் என சுவாமிமலை காவல்துறை யினருக்கு வட்டாட்சியர் தெரி வித்தார். ஆனால் அராஜகமாக நடந்து  கொண்ட கண்ணன் மற்றும் பாண்டி யன் எங்கோ சென்று விட்டனர்.

   இதனால் சனிக்கிழமை காலை  11 மணிக்கு அறுவடை செய்யப்பட்ட  நெல், மறுநாள் வரை இரவு-பகலாக பாது காப்பின்றி கிடந்தது. இதற்கு தீர்வு காணக் கோரி விவசாயி சிவசங்கரன் குடும்பத்தினர் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஞாயி றன்று கும்பகோணம் வட்டாட்சியர் அலுவல கம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     இதுகுறித்து விவசாயிகள் சங்க மாவட் டச் செயலாளர் கண்ணன், விவசாயி சிவசங்க ரன் நெல்லை வெளியில் எடுத்து வரவிடாமல்  அராஜகம் செய்தும், அவருடைய மரங்களை  அத்துமீறி வெட்டியும், நெற்பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் மோட்டார் செட்டுகளை முடக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசா யிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலி யுறுத்தினார்.