districts

img

திருநெல்வேலி-கொல்லம் நேரடி ரயில் இயக்கப்படுமா?

திருநெல்வேலி,  அக்.15- நெல்லையிலிருந்து கொல்லத்திற்கு நேரடி ரயில் இயக்கப்பட வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர் நெல்லையில் இருந்து செங்கோட்டைக்கு தினசரி இரு மார்க்கங்களிலும் 8 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. திருநெல்வேலியில் இருந்து கொல்லத்திற்கு செல்வதற்கு இதற்கு முன்பு செங்கோட்டையிலிருந்து கொல்லம் வரை கனெக்சன் ரயில் இருந்தது. தற்போது அந்த ரயில் மூன்று ரயிலாக இணைக்கப்பட்டு மதுரை -குருவாயூர்  எக்ஸ்பிரஸ் ரயிலாக செல்கிறது .எனவே நெல்லை சந்திப்பில் இருந்து காலை 9.40 மணிக்கு   புறப்படும் திருநெல்வேலி -செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலை கொல்லம் வரை நீட்டிக்க வேண்டும் அப்படி நீட்டிக்கும் போது கேரளாவில் இருந்து ஏலக்காய் ,தேயிலை, மிளகு போன்ற பொருட்கள் ஏற்றுமதி செய்ய  சிறந்ததாக திகழும். திருநெல்வேலியில் இருந்து கொல்லத்திற்கு தினசரி ரயிலும் கிடைக்கும்.மேலும் செங்கோட்டையிலிருந்து புனலூர் வரையிலான மலை தொடரை பயணிகள் பகல் நேரத்தில் கண்டுகளிக்க  வசதியாக இருக்கும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.