districts

திருச்சி முக்கிய செய்திகள்

சம்பைபட்டினம் பகுதியில் வேகத்தடை அமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

தஞ்சாவூர், செப்.3-  தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே அடிக்கடி  விபத்துகள் ஏற்படும் சாலையில் வேகத்தடை அமைக்கப் படுமா என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர். சேதுபாவாசத்திரம் அருகே உள்ள சம்பைபட்டினம் வழி யாக கிழக்கு கடற்கரை சாலை செல்கிறது. இங்கு அரசு உயர் நிலைப் பள்ளி, பள்ளிவாசல் மற்றும் ஊராட்சி அலுவலகம் அருகே பேராவூரணியிலிருந்து ஊமத்தநாடு, ஆலடிக்காடு வழியாக செல்லும் சாலை இணைகிறது. இதைப்போல எதிரே முஸ்லிம் தெருவுக்கு செல்லும் சாலையும் இணைகிறது. எனவே இந்த இடம் நான்கு சாலை கள் சந்திக்கும் இடமாக காட்சியளிக்கிறது. கிழக்கு கடற்கரை  சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. மேலும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் அதிவேகத்துடன் செல்வதால், சம்பைபட்டினம் பகுதியில் அடிக்கடி விபத்து கள் ஏற்படுகின்றன.  கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த இடத்தில் நடந்த  விபத்தில், வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். எனவே சம்பை பட்டினம் பகுதியில் இணையக்கூடிய 2 சாலைகளிலும் வேகத் தடை அமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை  விடுத்துள்ளனர். 

பேரூராட்சி மன்றக் கூட்டம்
 

பாபநாசம், செப்.3 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி மன்றக் கூட்டம்  பேரூராட்சித் தலைவர் பூங்குழலி  தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில், பாபநாசம் பேரூராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத் தின்கீழ் குடிநீர் திட்ட பணிகளை மேற்கொள்வது. 2022-23  ஆம் ஆண்டு மூலதன மானிய நிதி திட்டத்தின்கீழ் தெருக்களில்  சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்வது. பல்வேறு தெருக்களில் சிமெண்ட் சாலைகள், குடிநீர் குழாய்கள், தெரு மின்விளக்குகளை நீட்டிப்புச் செய்வது. 15 ஆவது நிதி குழு திட்டத்தின்கீழ் ஆழ்குழாய் கிணறு  அமைக்கும் பணி, ஈமக் கிரியை  மண்டபம் பழுது பார்த்தல்,  மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, மயானச் சாலை அமைத் தல், சிறிய குடிநீர் தொட்டி அமைத்தல், மின்விளக்கு அமைத் தல், வடிகால் கட்டுதல், புகைவண்டி நிலையத்திற்கு பாதை  அமைத்தல், கழிவுநீர் வடிகால் அமைத்தல் ஆகிய அத்தியா வசிய ப் பணிகளை மேற்கொள்வது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

பாபநாசம், செப்.3 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால்  வாகனங்களில் செல்வோர், நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். குழந்தைகளால் தெருக்களில் விளையாட முடிய வில்லை. தெருவில் நடந்துச் செல்லும்  குழந்தைகளை துரத்து கின்றன. பணி முடிந்து, இரவு நேரங்களில் வீடு திரும்ப முடிவ தில்லை.  மேலும், தெருக்களில் திரியும் ஆடு, கோழிகளை நாய்கள் துரத்துகின்றன. பிற பகுதிகளிலிருந்து கொண்டு வந்து, இங்கு நாய்களை விட்டுச் செல்கின்றனரா என தெரிய வில்லை. நாய்கள் தெருக்களில் சண்டையிட்டுக் கொள்கின்றன.  பாபநாசம் மட்டுமல்லாது, அருகிலுள்ள கபிஸ்தலம், ராஜகிரி  பகுதிகளிலும் நாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.  எனவே நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுமட்டு மின்றி, பாபநாசத்தில் குரங்குகளின் தொல்லையும் அதிகரித் துள்ளது. இதையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டு மென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோழிக்கறி கடையில் தீ விபத்து

திருச்சிராப்பள்ளி: திருச்சி பாலக்கரை எடத்தெரு கிருஷ்ணன் கோவில் அருகில் கோழிக்கறி கடை உள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலையில்,  கோழிக்கறியை உரித்து எடுக்க கேஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளனர். அப்போது  எதிர்பாராதவிதமாக கேஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக கடை முழு வதும் பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதைப் பார்த்து அக்கம்பக்கத்தி னர் உடனடியாக திருச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

‘மதி அங்காடி’ அமைக்க மகளிர் சுயஉதவிக் குழுக்கள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூர், செப்.3 - மதி அங்காடி (சுற்றுலா தலங்கள்)  அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவ னம், மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை நேரடியாக அதிகள வில் விற்பனை செய்ய “மதி அங்காடி” (சுற்றுலா தலங்கள்) என்ற பெயரில் வாகன அங்காடி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்க ளின் உற்பத்திப் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு கிடைப்பதுடன் சுற்றுலா பயணி களுக்கும், குறைந்த விலையில் தரமான பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யப்ப டும். அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் 3  அங்காடிகள் அமைக்கப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து, திருவாரூர் தியாக ராஜர் திருக்கோவில், மன்னார்குடி இராஜகோ பால் சுவாமி திருக்கோவில், குடவாசல், கூத்த னூர் சரஸ்வதி கோவில் ஆகிய மூன்று இடங் களில் மதி அங்காடி (சுற்றுலா) அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  எனவே மதி அங்காடியினை (சுற்றுலா தலங்கள்) இயக்குவதற்கும். பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஆர்வ மும், முன் அனுபவமும் உள்ள சுய உதவிக் குழுக்கள், (மாற்றுத்திறனாளி, நலிவுற்றோர்  குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்) சுயஉதவிக்குழு தர மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  விண்ணப்பிப்பவர்கள், சுயஉதவிக்குழு /  ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளில் ‘வராக்கடன் ஏதுமில்லை’ என்ற சான்றித ழுடன் விண்ணப்பங்களை தொடர்புடைய வட்டார இயக்க மேலாண்மை அலகில் பெற்று 15.9.2023 க்குள் திருவாரூர் மாவட்ட  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை  ஒருங்கிணைந்த கட்டிடத்தின் தரைத்தளத் தில் இயங்கும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்துள் ளார்.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு  பணிமனையில் தரமான உணவு வழங்கப்படுமா?

கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம் அறிவிப்பு

கும்பகோணம், செப்.3- போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு பணிமனையில் தரமான உணவு வழங்க வில்லை என்றால், கஞ்சி தொட்டி திறப்போம்  என தொழிலாளர்கள் போராட்டம் அறி வித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அசூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை இயங்கி  வருகிறது. இங்கு போதுமான வசதி யின்றி, வயல்வெளிகளில் பணிமனை அமைந் துள்ளதால் மழைக்காலத்தில் சேறு சகதிகளி லும், கோடை காலத்தில் புழுதியிலும் நின்று  தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.  இந்நிலையில் தொழிலாளர்களுக்கான பணிமனையில் குறைந்த விலையில் உணவு  கொடுப்பது வழக்கம். ஆனால் தற்போது உணவு வழங்கும் டெண்டரை மதுரையைச் சேர்ந்த ஒருவர் எடுத்துள்ளார். இங்கு வழங்கப்படும் உணவுகள் தரமின்றி இருப்ப தால், தொழிலாளர்களுக்கு பல்வேறு உடல்  உபாதைகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரி வித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பணி மனையிலேயே தரமான உணவுகளை தயாரித்து கொடுக்கவில்லை என்றால்,  கஞ்சித் தொட்டி திறப்போம் என சங்க பாகு பாடின்றி அனைத்து தொழிலாளர்களும் அறி வித்துள்ளனர். தொழிலாளர்களுக்கு தரமான உணவு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார் களா?

முதல்வரை அவதூறாக விமர்சித்த பாஜக நிர்வாகி கைது

புதுக்கோட்டை, செப்.3 - தமிழக முதல்வரை சமூக வலைதளத் தில் அவதூறாக விமர்சனம் செய்த பாஜக நிர்வாகியை போலீசார் ஞாயிற் றுக்கிழமை கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி அருகே அரசர்குளம் கிழக்குப் பகுதியை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (27). பாஜக கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட செயலாளராக உள்ள இவர், தனது முகநூல் பக்கத்தில் தமிழக முதல்வர், விளையாட்டுத் துறை அமைச்சரை அவதூறாக விமர்சனம் செய்ததாகக் கூறப்படுகிறது.  இதுகுறித்து திமுக மாணவர் அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை அளித்த புகாரின் பேரில், நாகுடி போலீசார் வழக்குப் பதிவு  செய்து கமலக்கண்ணனை ஞாயிற்றுக் கிழமை கைது செய்தனர்.

செவிலியர் தற்கொலை வழக்கில் காதலன் கைது

கும்பகோணம், செப்.3- கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் பணி யாற்றிய செவிலியர் தற்கொலை வழக்கில் காதலன் கைது  செய்யப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த மண லூர், திருமாந்துறை தோப்புத்தெரு பகுதியை சேர்ந்த வர் கோவிந்தராஜன். இவருடைய மகள் வைஷ்ணவி  (22). இவர் நர்சிங் படித்து முடித்து விட்டு கும்பகோணத் தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தங்கி இருந்து செவிலியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று மருத்துவமனையில் உள்ள தங்கும் அறையில் வைஷ்ணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கும்பகோணம் மேற்கு போலீ சார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் வைஷ்ணவியின் செல்போனை ஆய்வு  செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில்,  அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (25) என்பவரை, வைஷ்ணவி காதலித்து வந்ததும், இவர்களுக்கு இடையே  ஏற்பட்ட தகராறில், மனமுடைந்து வைஷ்ணவி தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இதைத்  தொடர்ந்து போலீசார் சதீஷ்குமாரை கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

காவல் ஆய்வாளரின் ரோந்து வாகனம் பறிப்பு எஸ்.பி. நடவடிக்கை

திருச்சிராப்பள்ளி, செப்.3 - திருச்சி மாவட்டம் சிறுகனூர் காவல் நிலையத்தில் பணி யாற்றி வரும் காவல் ஆய்வாளர் ஒருவர், காவல்  நிலையத்துக்கு நேரில் வந்து மக்கள் கொடுக்கும் புகார் களை சரியாக விசாரிப்பதில்லை என்றும், முறையாக ரோந்து செல்வது இல்லை என்றும் புகார் எழுந்தது.  அதைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அவரை நேரில் அழைத்து விசாரித்தார். அப்போது, காவல் ஆய்வாளர் மழுப்பலாக பதில் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ரோந்து  செல்லாமல் காவல் நிலையத்திலேயே நிறுத்தி வைப்ப தற்கு போலீஸ் ஜீப் உங்களுக்கு தேவையில்லை. உடனே அந்த ஜீப்பை மாவட்ட ஆயுதப்படை அலுவல கத்திற்கு கொண்டு சென்று நிறுத்துமாறு உத்தரவிட்டார்.  அதன்படி சிறுகனூர் காவல் நிலையத்தில் நிறுத்தப் பட்டிருந்த ஜீப், ஆயுதப்படை மைதானத்திற்கு எடுத்துச்  செல்லப்பட்டது.

‘இன்பநிதி பாசறை’ என்ற பெயரில் போஸ்டர் திமுகவில் இருந்து இருவர் நீக்கம்

புதுக்கோட்டை, செப்.3 - புதுக்கோட்டையில் முதல்வர் ஸ்டாலினின் பேரனும்,  உதயநிதியின் மகனுமான இன்பநிதியின் பெயரில் போஸ்டர் அடித்த திமுகவைச் சேர்ந்த இருவர் தாற்கா லிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ‘இன்பநிதி பாசறை’ என்ற பெயரில் செப்.24 அன்று  புதுக்கோட்டையில் நலத்திட்ட உதவிகள் வழங்குவ தாகக் குறிப்பிட்டு ‘எதிர்காலமே’ என்ற போஸ்டர் சனிக் கிழமை மாலை சமூக ஊடகங்களில் பரவியது. இந்நிலையில் அந்த போஸ்டரை வெளியிட்ட திமுக வின் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் துணை அமைப்பாளர் வடவா ளம் க.செ.மணிமாறன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மு.க.திருமுருகன் ஆகியோரை தற்கா லிக நீக்கம் செய்வதாக, திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளியிட்டார்.  கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் அவப்பெயர் ஏற்படுத் தும் நோக்கிலும் செயல்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் கட்டப்படுமா?

பாபநாசம், செப்.3 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 50 மாணவ,  மாணவிகள் படித்து வருகிற நிலையில், ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியை பணியில் உள்ளனர்.  பள்ளி வளாகத்தில் இருந்த கட்டிடத்தில் அங்கன் வாடி செயல்பட்டு வந்தது. கட்டிடம் பழுது காரணமாக,  இந்த அங்கன்வாடி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதுடன், கட்டிடமும் இடிக்கப்பட்டது. கட்டிடம் இடிக்கப்பட்டு சில  வருடங்கள் கடந்த நிலையில், அந்த இடம் தற்போது காலி யாக உள்ளது. காலியாக உள்ள அந்த இடத்தில், மீண்டும் அங்கன் வாடி செயல்படும் வகையில் புதிதாக கட்டடம் கட்டித் தர  வேண்டும். இதனால் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் பயன்பெறுவர் என்பது பள்ளியைச் சுற்றி யுள்ள பகுதிகளை சேர்ந்த பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக  உள்ளது. மாவட்ட நிர்வாகம் இதில் உரிய கவனம் செலுத்த  வேண்டும் என பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

கொள்ளிடம் ஆற்றில் போர்வெல் அமைக்க எதிர்ப்பு

63 பேர் கைது

அரியலூர், செப்.3- அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் புதிய போர்வெல் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த 63 பேர் கைது செய்யப்பட்டனர். திருமானூரை அடுத்த தூத்தூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் புதிய போர்வெல் அமைத்து, நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு குடிநீர் கொண்டு செல்வ தற்கான துவக்கப் பணிகள் சனிக்கிழமை நடை பெற்றன.  இதையறிந்து அங்கு வந்த தூத்தூர், குருவாடி, தேளூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள், கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப் பணை கட்டிய பிறகுதான் புதிய போர்வெல் அமைக்கும்  திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக்  கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த  விவசாயி ஒருவர், தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து,  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், எதிர்ப்பு  தெரிவித்த 63 பேரை கைது செய்தனர்.  சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா, கோட்டாட்சி யர் ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் கண்ணன் உள்ளிட் டோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போர்வெல் அமைக்கும் பணிக்கான நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

10 ஆண்டுகளை நிறைவு செய்த தஞ்சை - சென்னை உழவன் ரயில்

கும்பகோணத்தில் பயணிகள் உற்சாக வரவேற்பு

கும்பகோணம்,  செப்.3 -  தஞ்சை - சென்னை இடையே இயக்கப் படும் உழவன் எக்ஸ்பிரஸ் ரயில் 10 ஆண்டு கள் பயணத்தை நிறைவு செய்து, 11 ஆவது  ஆண்டை தொடங்கியுள்ளது. இதையொட்டி  சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு கும்பகோ ணத்திற்கு வந்த உழவன் எக்ஸ்பிரஸ் ரயி லுக்கு பயணிகள் உற்சாக வரவேற்பு அளித்த னர். தஞ்சை - கும்பகோணம் - விழுப்புரம் ரயில்  பாதை சுமார் 145 ஆண்டுகள் பழமையா னது. இந்தப் பாதையில், ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருவனந்தபுரம் உள்ளிட்ட  தென் பகுதிகளுக்கு ரயில் இயக்கப்பட்ட தால் மெயின் லைன் பாதை என அழைக்கப் படுகிறது.  இது மீட்டர் கேஜ் பாதையாக இருந்த  போது, சென்னை செல்லும் தஞ்சை மாவட்ட  பயணிகளுக்கு முன்பதிவில் சுமார் 1,400 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தன. பின்னர், உழவன் எக்ஸ்பிரஸ் தஞ்சை -  விழுப்புரம் மெயின் லைன் பாதை முழு வதும் அகலப் பாதையாக மாற்றப்பட்டது. அப்போது பகல்நேர சோழன் விரைவு ரயில்  மற்றும் இரவு நேரங்களில் சென்னை செல்லும் ரயில்கள் இயக்கப்பட்டன.  இந்நிலையில், சென்னை செல்ல தஞ்சை யில் இருந்து புதிய ரயில் இயக்கப்பட வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை  விடுத்தனர். இதை ஏற்று, 2013 ஆம் ஆண்டு  மத்திய பட்ஜெட்டில் தஞ்சை - சென்னை இடையே புதிய விரைவு ரயில் இயக்கப்படும்  என அறிவிக்கப்பட்டு, அதன்படி ‘உழவன் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் ரயில் இயக்கப்பட் டது. இந்த ரயிலை ஒன்றிய நிதித்துறை முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமா ணிக்கம் தஞ்சையில் தொடங்கி வைத்தார். தற்போது இந்த உழவன் எக்ஸ்பிரஸ் ரயில்  10 ஆண்டுகளை நிறைவு செய்து, 11 ஆவது ஆண்டைத் தொடங்கியுள்ளது.  இந்த ரயிலில் 12 படுக்கை வசதி பெட்டி கள், 6 ஏ.சி. பெட்டிகள், 3 பொதுப் பெட்டிகள்  என மொத்தம் 21 பெட்டிகள் உள்ளன. பண்டிகை காலங்களில் கூட்டத்திற்கேற்ப இந்த ரயிலில் பெட்டிகள் கூடுதலாக இணைக் கப்படும். இந்நிலையில் சனிக்கிழமை இரவு 10.30  மணிக்கு கும்பகோணம் வந்த உழவன் ரயி லுக்கு தஞ்சை மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினர், பயணிகள் மற்றும் வணிக சங்கங் கள் ரயிலுக்கு மலர்கள் தூவி வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து ரயில் ஓட்டுநர்கள், காவலர்களுக்கு சால்வை அணிவித்து கவு ரவித்தனர்.

கட்டணமில்லா பேருந்து பயண அட்டை: விண்ணப்பங்களை ஒப்படைக்க அறிவுறுத்தல்

கரூர், செப்.3 - கட்டணமில்லா பேருந்து பயண அட்டைக்கு விண்ணப்பிக்காத கரூர் மாவட்டத் தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களை கண்டறிந்து, அவர்களது விண்ணப்பங்களை பள்ளித் தலைமையாசிரியர் ஒப்படைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் (கும்பகோணம்) லிட். கரூர் மண்டல பொது மேலாளர் சிவசங்கரன் தெரி வித்துள்ளதாவது: கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 102, கரூர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 116, குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 252, கரூர் சாரதா பெண்கள் மேல்நிலைப் பள்ளி 67, செயிண்ட் தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி 240, புகளூர் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி 279, அரவக்குறிச்சி அரசு  பெண்கள் மேல்நிலைப் பள்ளி 83,  குளித்தலை  அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 892 ஆகிய பள்ளிகளுக்கு அரசு போக்குவரத்து கழகத்தின் கரூர் மண்டல அலுவலர்கள் கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கினர். இது போன்று அனைத்துப் பள்ளிகளுக் கும் முதற்கட்டமாக தயார் நிலையில் உள்ள  21,564 கட்டணமில்லாப் பேருந்து பயண அட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர், அலுவலகம் மூலம் உடனடியாக வழங்க  திட்டமிடப்பட்டுள்ளது. அரசுப் பேருந்தில் பயணம் செய்வதற் கான விண்ணப்பங்கள் வழங்கப்படாத மாணவ, மாணவிகளை கண்டறிந்து, ஒரு வாரத் திற்குள் போக்குவரத்து கழகத்தின் கரூர்  மண்டலத்தில் பள்ளி தலைமை ஆசிரி யர்கள் விண்ணப்பங்களை ஒப்படைத்து, கட்டணமில்லா பேருந்து பயண அட்டை பெற்றிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிமுக பிரமுகரின் வீடு,  அலுவலகங்களில் சிபிசிஐடி சோதனை

மன்னார்குடி, செப்.3- அதிமுகவைச் சேர்ந்தவரும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியக் குழு தலைவ ருமான டி.மனோகரன் மீது, மன்னார்குடி கருத்த நாதபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின்  மனைவி ரோஸ்லின் சென்னை உயர்நீதிமன்றத் தில் புகார் மனுத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில், “தனது மாமியார் ஞானாம் பாள் உயிருடன் இருந்தபோதே, அவர் இறந்து விட்டதாக போலி சான்றிதழ் தயாரித்து, மன்னார் குடி நடேசன் தெருவில் அவருக்கு சொந்தமான  ரூ.20 கோடி மதிப்புள்ள நிலத்தை மனோகரன் அபகரித்து விட்டார். இந்த மோசடியில் மனோகரனின் மனைவி அமுதா உட்பட 10 பேருக்கு தொடர்புள்ளது. இந்த  மோசடி குறித்து திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் 2017 ஆம் ஆண்டு புகார்  அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. எனவே இந்த விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்” என தெரிவித்திருந்தார். கடந்த ஏப்ரல் 27 அன்று இந்த மனு வினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,  வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியும், 3 மாதத்திற் குள் விசாரித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தது.  இதன் தொடர்ச்சியாக சிபிசிஐடி போலீ சார், காவல் துணை கண்காணிப்பாளர் அருளர சன் தலைமையில், மன்னார்குடி கனகாம்பாள் கோவில் தெருவில் உள்ள டி.மனோகரன் வீட்டில்  சோதனையில் ஈடுபட்டனர். மன்னார்குடி பெரிய  கம்மாளத் தெருவில் உள்ள மனோகரனின்  நிறு வன அலுவலகத்திலும் போலீசார் சோதனை நடத்தினர். இதில் வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதிமுக பிரமுகரான டி.மனோகரன், மன்னார்குடி ஒன்றி யக் குழு தலைவராகவும், அவரது மனைவி  அமுதா சேரன்குளம் ஊராட்சித் தலைவராக வும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.