districts

img

சாலையில் அடர்ந்து வளர்ந்திருக்கும் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

தஞ்சாவூர், செப்.26-  கிழக்கு கடற்கரை சாலையில் பல இடங் களில் அடர்ந்து, படர்ந்து  வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டத்தில் கிழக்கு கடற் கரை சாலையானது, தம்பிக்கோட்டை தொடங்கி, புதுக்கோட்டை எல்லையான கட்டுமாவடி வரை சுமார் 45 கி.மீட்டர் தூரம்  கொண்டது.  கன்னியாகுமரி - சென்னையை இணைக் கும் முக்கிய சாலையாக கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இராமேஸ்வரம், மனோரா,  வேளாங்கண்ணி, நாகூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட சுற்றுலா மற்றும் ஆன்மீக தலங்க ளுக்கு செல்லும் வழியாக இது உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பய ணம் செய்தவாறு உள்ளனர்.  இந்நிலையில் தஞ்சை மாவட்ட பகுதி களான தம்பிக்கோட்டை வடகாடு, அதிராம் பட்டினம், புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், சம்பைப்பட்டினம், செந் தலைப் பட்டினம், குப்பத்தேவன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சாலையின் இருபுற மும் கருவேல மரங்கள் புதர் போல் மண்டி  கிடக்கின்றன. இந்த கருவேல மரங்கள் படர்ந்து சாலை யில் விழுந்து கிடக்கிறது. இதனால் எதிரே கனரக வாகனங்கள் வரும்போது, இரு சக்கர  வாகனத்தில் செல்வோர் ஒதுங்க முடியாத நிலை உள்ளது. மேலும், எதிரே வரும் வாக னங்கள் தெரியாத வகையில், மரக்கிளை கள் சாலையை மறைத்து விடுகின்றன. இதன் காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்படு கின்றன.  இதுமட்டுமின்றி, சாலையில் செல்வோ ரின் முகம், கண்களை கருவேல முள்கள் பதம் பார்க்கிறது. எனவே சீமைக்கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செந்தலைப்பட்டினம் கிளைச் செய லாளர் ரஷித் கான் கூறுகையில், “பொது மக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ள கருவேல மரங்களை, முள்களை உட னடியாக அகற்ற வேண்டும். இதுகுறித்து பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும், உரிய  நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே  சம்பந்தப்பட்ட துறையினர் உரிய  நடவ டிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.