தஞ்சாவூர், ஆக.20-
பூக்கொல்லை அருகே ஆபத்தான நிலையில் உள்ள சாலையை சீர மைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள் ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவா சத்திரம் ஒன்றியம் பூக்கொல்லை ஒன்றிய அலுவலகத்தில் இருந்து, ரெட் டவயல் செல்லும் சாலையில் 4 இடங் களில், கடந்த 3 ஆண்டுகளாக காட்டாற் றின் குறுக்கே சாலை அமைக்கும் பணி கள் நடைபெற்று வருகின்றன. இதனால் அதன் அருகிலேயே மாற்றுச் சாலை அமைக்கப்பட்டு, போக்குவரத்து நடை பெற்று வருகிறது.
இந்நிலையில் பூக்கொல்லையில் உள்ள சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில், கலைஞர் நகர், பெரியார் சமத்துவபுரம் செல்லும் வழி யில், வாகனங்கள் செல்லும் தற்கா லிக சாலை, தார்ச்சாலையாக அமைக்கப் படாமல் ஜல்லிக்கற்களை கொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இதன் அருகிலேயே சிறிய வாய்க்கால் செல்கிறது. சாலையின் இரு புறமும் ஆபத்தான பள்ளம் உள்ள தால், இந்த வழியாக இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடிய வில்லை. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் படியில் தொங்கியவாறு பயணிக்கின்றனர்.
இந்த இடத்தை கடந்து செல்ல பேருந்து ஓட்டுநர்கள் மிகுந்த சாமர்த்தி யத்துடன் வாகனத்தை இயக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன்பு, இந்த சிறிய மாற்றுச் சாலையை பாது காப்பான தார்ச்சாலையாக அமைத்து, பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்க சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.