சிபிஎம் ஆர்ப்பாட்டம் திருச்சிராப்பள்ளி, அக்.29 - புள்ளம்பாடியை தனி தாலுகாவாக அறிவித்து, அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும். அனைத்து வார்டுகளுக்கும் சுத்தமான குடிநீர், தெருவிளக்கு, தார்ச்சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். ரயில்வே மேம் பாலம், சமுதாய கூடம் அமைத்து தர வேண்டும். அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி, மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும். மேலும் ஸ்கேன் வசதியை ஏற்படுத்த வேண்டும். இரு ளர் தெருவில் மின்விளக்கு, மின் இணைப்பு இல்லாத அனைவருக்கும் மின் வசதி, குடியிருப்போருக்கு வீட்டு வரி ரசீது வழங்க வேண்டும். இருளர் மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும். தைலாகுளத்தில் நடந்த தொடர் போராட்டத்தால், பட்டா குறித்து கணக்கு எடுத்த 75 பேருக்கு பட்டா வழங்க வேண்டும். பேரூராட்சிக்குட் பட்ட அனைத்து மக்களுக்கும் நூறு நாள் வேலை சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும். சகாயமாதா முதல் காமராஜர் சிலை வரை குண்டும் குழியு மாக உள்ள சாலையை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புள்ளம் பாடி காமராஜர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு புள்ளம்பாடி ஒன்றியச் செயலாளர் ரஜினிகாந்த் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் சந்திரன், நடராஜன், கிளைச் செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகி யோர் பேசினர்.