districts

img

மயிலாடுதுறையில் கட்டப்பட்டு வரும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டட கட்டுமானப் பணிகளை அமைச்சர் ஆய்வு

மயிலாடுதுறை, மார்ச் 20 -  மயிலாடுதுறை மாவட்டம் மன்னம் பந்தல் ஊராட்சி பால் பண்ணை அருகில் ரூ.114.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் பிற  அரசு துறை அலுவலக கட்டட கட்டு மானப் பணிகளின் தரத்தினை பொதுப் பணித்துறை (கட்டடங்கள்), நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறை முகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தரைதளம் மற்றும் 7 அடுக்குமாடி தளங்கள் கட்டப்படவுள்ளன. இதன்  மொத்த பரப்பளவு 26,024 ச.மீட்டரும்,  2,80,018 சதுர அடியும் ஆகும். மொத்தமுள்ள 21.17 ஏக்கர் பரப்பள வில் 15.24 ஏக்கர் பரப்பளவில் கட்டு மானப் பணிகள் நடைபெறவுள்ளன. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்  அலுவலக முகப்பு தோற்றம் மற்றும் ஆர்க்கிடேக்சர் வரைபடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் முடிவு செய்துள்ளார். அதன்படி முகப்பு தோற்றம் அமையவுள்ளது. மயிலாடு துறை மாவட்ட தலைநகரம் மற்றும் திருவாரூர் மாவட்ட தலைநகரம் ஆகிய இரண்டையும் இணைக்க 36 கி.மீ தூரம் உள்ளது. சென்னை–கன்னியாகுமரி சிறப்பு திட்டத்தில், இரண்டு மாவட்டங்களையும் இணைக்ககூடிய (மயிலாடுதுறை -  திருவாரூர்) நான்கு வழிச்சாலை அமைக்க டெண்டர் கோரப்பட வுள்ளது.  

இரண்டு ஒப்பந்ததாரர்களிடம் டெண்டர் கோரப்படும். ஒரு டெண்டர்  ரூ.105 கோடி மதிப்பீட்டிலும், மற் றொன்று ரூ.103 கோடி மதிப்பீட்டும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இச்சாலை பணிகளை விரைவு படுத்த நிலங்களை கையகப்படுத்த வுள்ளோம், இத்திட்டத்திற்கு இதுவரை 6 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தரமான சாலைகள் அமைப்பட வேண்டும் என்பதற்காக ஒப்பந்தாரர் களுடன் கூட்டம் நடத்தி, தரமான சாலைகளை அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  1954 ஆம் ஆண்டு நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான ஆய்வகம் உள்ளது. அதேபோல் பொதுப் பணித் துறைக்கும் சொந்தமான ஆய்வுகம் உள்ளது. 48 கிரேடு சிமென்ட் என்பதை  மாற்றி 53 கிரேடு சிமென்ட் பயன்படுத் தப்படுகிறது. ஒரு கட்டடம் கட்டுவ தற்கு முன்பி, கட்டத்தின் மண் பரி சோதனை, நிலத்தடி நீர் பரிசோதனை, எம்சாண்ட் பரிசோதனை போன்ற பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். இதன் பின்னரே கட்டம் கட்ட அனுமதி வழங்கப்படும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைக்கும் வரை சிறப்பாக கட்டி முடிக்கப்படுகிறதா என நேரில் ஆய்வு செய்வேன். இவ்வாறு அமைச்சர் கூறினார். ஆய்வின்போது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, அரசு  தலைமை கொறடா.கோவிசெழியன், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப் பினர் செ.ராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பி னர் எம். பன்னீர்செல்வம், மயிலாடு துறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜ்குமார், பொதுப் பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் (கட்டடம்) (சென்னை) ஆர்.விஸ்வ நாத், பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் (கட்டடம்) (திருச்சி ராப்பள்ளி மண்டலம்) எல்.ரவிச்சந்தி ரன் மற்றும் பல்வேறு அரசு அலுவ லர்கள் உடனிருந்தனர்.