மயிலாடுதுறை அக்.17- மயிலாடுதுறை மாவட் டம், ஆக்கூர் ஊராட்சிக் குட்பட்ட ஆக்கூர் முக்கூட் டில் பேருந்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பொதுக் கழிப்பறை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கழிப்பறை கட்டி டம் அமைய தேர்வுசெய்யப் பட்ட குளத்து புறம்போக்கு இடம் தருமபுரம் ஆதீ னத்திற்கு சொந்தமானது என கூறி பணிகள் தடை பட்டு கிடப்பில் கிடக்கிறது. ஆக்கூர் முக்கூட்டில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள பொதுக் குளத்தை யொட்டிய இடத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் பெண்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பாட் டிற்காக பொதுக்கழிப்பறை கட்டுவதென ஆக்கூர் ஊராட்சி மன்றத்தில் தீர்மா னம் நிறைவேற்றி பணிக் கென 2022-23 ஆண்டிற்கான 15 ஆவது நிதிக்குழு மானி யத்தில் ரூ. 3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் துவங்கப்பட இருந்தநிலையில் பொதுக் குளமான முக்கூட்டு குளம் மற்றும் அதைச்சுற்றிய கரைப்பகுதிகள் முழுவதும் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தம் என காரணம் காட்டி பணிகளை தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆக்கூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளான கிடங்கல், மாமாக்குடி,காலமநல்லூர், சின்னங்குடி, குமாரக்குடி, மருதம்பள்ளம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங் களை சேர்ந்த பொதுமக்கள் வெளியூர் செல்ல குறிப் பாக சென்னை, புதுச்சேரி, சிதம்பரம் ,நாகை, காரைக் கால், வேளாங்கண்ணி, பொறையார், திருக்கடை யூர், செம்பனார்கோவில் , மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுவர ஆக்கூர் முக்கூட்டு வந்து தான் பேருந்துக்காக காத்தி ருந்து செல்லும் நிலை உள்ளது. இந்நிலையில் ஆக்கூர் முக்கூட்டில் பொதுக்கழிப் பறை ஒன்றை கட்டித்தர வேண்டுமென பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்றி தற்போது அதற்கான பணிகள் துவங்கிய நேரத் தில் பொதுக்குளமும்,குளத்தைச்சுற்றியுள்ள இடமும் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமானது என கூறி தடைசெய்திருப்பது பொது நலவிரும்பிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி யுள்ளது. உடனடியாக மயிலாடு துறை மாவட்ட ஆட்சியர் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள் ளது. பொதுநலன் பேசுகின்ற தருமபுரம் ஆதீன மடாதிபதி மக்கள் நலன்காக்க முன் வருவாரா? என பல்வேறு தரப் பினரும் கேள்வி எழுப்பி யுள்ளனர்.