உடுமலை, மே 12- உடுமலை – மூணாறு சாலையில் வனவிலங்குகள் சாலையை கடந்து செல்வதால் வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையை விரிவாக்கம் செய்ய வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண் டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை 9/6 செக்போஸ்ட் பகுதியில் இருந்து சின் னாறு வரையிலான சாலைகளில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்கு கள் கடக்கும் இடமாக உள்ளது. இந்நி லையில், சின்னாறு வரையிலான சாலை முகவும் குறுகியதாக இருப்பதால், அவ் வழியாக செல்லும் வாகன ஓட்டிக ளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுகி றது. எனவே, இந்த குறுகிய சாலை பகு தியை விரிவாக்கம் செய்ய வாகன ஓட்டி கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து வாகன ஓட்டிகள் கூறு கையில், உடுமலை 9/6 செக்போஸ்ட் பகுதியில் இருந்து சின்னாறு வரை, சுமார் எட்டு கிலோ மீட்டர் தூரம், ஒரு வாகனம் மட்டுமே செல்லும் வகையில் குறுகிய சாலையாக உள்ளது. மேலும் சாலைகளின் இருபுறமும் குழி ஏற்பட் டுள்ளதால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. அதேசமயம், காட்டு யானைகள் சாலை களை கடந்து செல்லும் போது, வாகனங்களை திருப்பி எடுக்க முடி யாமல் அங்கேயே பயத்துடன் நிற்க வேண்டிய சூழலும் உள்ளதால், சாலையை விரிவாக்கம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையை கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.