திருவாரூர், ஆக.22-
திருவாரூர் மாவட்டம் நன்னி லம் ஒன்றியம் மகாராஜபுரம் கிரா மத்தில் பிற கட்சியிலிருந்து விலகிய 10 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.
நிகழ்ச்சிக்கு சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். கிளைச் செய லாளர் ஏ.பிரபாகரன் முன்னிலை வகித்தார். பேரளம் அருகே உள்ள மகாராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி முன்னிலையில் தங் களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
இவர்களுக்கு செந்துண்டு அணிவித்து மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி வரவேற்றார். நன்னிலம் ஒன்றியச் செயலாளர் கே.எம்.லிங்கம், மாவட்ட குழு உறுப்பினர் டி.வீரபாண்டியன், சிபிஎம் மாவட்ட கவுன்சிலர் ஜ.முக மது உதுமான், வாலிபர் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.எம்.சலாவு தீன் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.