திருவாரூர், ஆக.7 - சர்வதேச தடகளப் போட்டியில் தங்கம் வென்ற இளைஞருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றியம் மேலப்பாலையூர் ஊராட்சி, திருக்குடி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ஆரோக்கிய தாஸ்-விக்டோரியா. இவர்களது மகன் மாறன் கடந்த வாரம் நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டார். அதில், 200 மீட்டர் தடகளப் போட்டியில் பங்கேற்று முதல் இடம் பெற்று தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். தடகள வீரர் மாறன் இளம் வயதிலேயே தந்தையை இழந்தவர். தனது தாயார் விக்டோரியா தினக்கூலியாக பணியாற்றி, மாறனை கல்லூரி வரை படிக்க வைத்துள்ளார். விளை யாட்டில் ஆர்வமுள்ள மாறன், கும்பகோ ணம் அரசினர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறார். இந்நிலை யில், நேபாளத்தில் நடைபெற்ற தடகளப் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றுள்ளார். தனது கடும் முயற்சியினால், தடகளப் போட்டியில் வென்ற தங்கப் பதக்கத்துடன் கிராமத்துக்கு வந்த மாறனை, கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்தி வரவேற்றனர்.