districts

நார்த்தாமலையில் திருமண மண்டபம் காணொலி மூலம் முதல்வர் திறப்பு

புதுக்கோட்டை, ஆக.14-

     தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் புதுக்கோட்டையை அடுத்த நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் திருமண மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

    இந்து சமய அறநிலையத் துறையின்  சார்பில் திருக்கோயில்களில் கட்டப்பட வுள்ள திருமண மண்டபம், பக்தர்கள் தங்கும் விடுதி, வணிக வளாகம், பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், உணவருந்தும் கூடம், அடுக்குமாடி குடியிருப்புகள், கல்லூரி ஆய்வகங்கள் உள்ளிட்ட புதிய திட்டப் பணிகளுக்கு காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    இதனொரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயிலில் திருமண மண்டபம் கட்டுவதற் கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.  இதில் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா,  கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, திமுக வடக்கு  மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லபாண்டி யன் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.