புதுக்கோட்டை, ஜூன் 19-
முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தூங்கிக்கொண்டி ருந்ததால், சீர்கெட்டு இருந்த சுகா தாரத் துறையை நாங்கள் தூக்கி நிறுத்தி வருகிறோம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள் ளார்.
புதுக்கோட்டை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையின் இறுதிக்கட்ட கட்டுமானப் பணி களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனுடன் திங்கள் கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களி டம் அமைச்சர் கூறுகையில், ‘‘புதுக்கோட்டையில் ரூ.63 கோடி மதிப்பில் அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கான கட்டுமானப் பணி கள் ஜூலை 15 அன்று நிறைவடை யும்.
தமிழ்நாட்டில் 1953-ஆம் ஆண்டு ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழ கத்தில் இயங்கிவந்த பல் மருத்து வக் கல்லூரியையும் தமிழ்நாடு அரசு எடுத்துக்கொண்டது.
அந்த வகையில் மூன்றாவது பல் மருத்துவக் கல்லூரியாக புதுக் கோட்டை அமைய உள்ளது. 6 பேராசிரியர்கள், 11 இணைப் பேரா சிரியர்கள், 30 உதவிப் பேராசிரி யர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் 102 பேர் கொண்ட பணியிடங்களை உருவாக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. புதிய பல் மருத்துவக் கல்லூ ரியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழ்நாட்டில் மூன்று மருத்து வக் கல்லூரிகள் நிறுத்தப்பட்டது என்ற செய்தி தவறானது. ஒவ் வொரு ஆண்டும் இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். ஆய்வில் ஏதும் குறைபாடுகள் தெரியவந்தால் அதை நிவர்த்தி செய்து மீண்டும் தொடங்கப்படும்.
அதன்படி எம்எம்சி நிர்வா கத்தின் ஆய்வில் திருச்சி, தர்ம புரி, சென்னை ஸ்டான்லி மருத்து வமனைகளில் பயோமெட்ரிக் சிசிடிவி கேமரா போன்றவற்றில் சிறிய அளவிலான குறைபாடுகள் தெரிவிக்கப்பட்டது. இவை நிவர்த்தி செய்யப்பட்டு, மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்ட அனைத் துக் கல்லூரிகளுக்கும் தற்பொ ழுது அனுமதி பெறப்பட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ்
மதுரை எய்ம்ஸ்சை பொறுத்த வரை கடந்த இரண்டு ஆண்டு கால மாகவே 50 மாணவர்கள் இராமநாத புரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி யில் படித்து வருகின்றனர். அது போல் இந்த ஆண்டுக்குரிய 50 மாணவர்களும் அங்கே படிப்பை மேற்கொள்வார்கள். அவர்களுக்கு ரிய வசதிகள் செய்து தரப்படும்.
முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் அவரது காலகட்டத்தில் தூங்கிக்கொண்டு இருந்ததால் தான் தற்பொழுது சுகாதாரத் துறை யை தூக்கி நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. அவரது நிர்வாகச் சீர்கேடு களை தற்பொழுது சரிசெய்து வரு கிறோம்.
மக்களை தேடி மருத்துவத்தில் ஒரு கோடியே ஐம்பதாயிரத்திற் கும் மேலான மக்கள் பயனடைந் துள்ளனர். இன்னுயிர் காப்போம் திட்டத்தில் ஒரு லட்சத்து 67 ஆயிரம் உயிர்கள் கடந்த இரண்டு ஆண்டு களில் காப்பாற்றப்பட்டுள்ளனர். இதையெல்லாம் பார்த்து பொறுத் துக் கொள்ள முடியாத முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சுகாதா ரத்துறை தூங்குவதாக தெரி வித்துள்ளார். தூங்குவது அவரா? அல்லது துறையா? என்பது மக்க ளுக்குத் தெரியும்’’ எனத் தெரி வித்துள்ளார்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா, சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா, திமுக மாவட்டச் செயலாளர் கே.கெ.செல்லப் பாண்டியன் உள்ளிட்டோர் உட னிருந்தனர்.