தஞ்சாவூர், ஆக.24-
தஞ்சாவூர் கல்லணைக் கால்வாயிலிருந்து குழாய் கள் மூலம் அழகி குளத்துக்கு புதன்கிழமை நீர் வரத்து ஏற்படுத்தப்பட்டது.
தஞ்சாவூர் மாநகரில் சோழர்கள், நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் 50-க்கும் அதிகமான குளங்கள் வெட்டப்பட்டு, நீர் ஆதாரம் உருவாக்கப்பட்டது. இதில், பர்மா பஜார் அருகேயுள்ள அழகி குளமும் ஒன்று. ஆனால், காலப்போக்கில் நீர் வழித்தடங்கள் ஆக்கிர மிக்கப்பட்டதால், இக்குளத் துக்கு தண்ணீர் வரத்து பாதிக்கப்பட்டது. இதனால், இக்குளம் குப்பை மேடாக வும், புதர்கள் அடர்ந்த பகுதி யாகவும் மாறியது.
இந்நிலையில், பாம்பாட் டித் தெரு, கவாஸ்காரத் தெரு மக்களின் முயற்சி யால் அழகி குளம் தூர்வாரப் பட்டது. மேலும், குளத்தைச் சுற்றி நடைபாதை அமைக் கப்பட்டு, மரங்களும் நடப் பட்டன. இதையடுத்து, கல்ல ணைக் கால்வாயிலிருந்து குழாய் மூலம் இக்குளத் துக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது.
பின்னர், மாநகராட்சி நிர் வாகம் சார்பில் பொலிவுறு நகரத் திட்டத்தின் மூலம் ரூ. 1.44 கோடி செலவில் இக் குளம் சீரமைக்கப்பட்டது. இதன்மூலம் சுற்றுச்சுவர், நடைபாதையில் நடைப் பயிற்சி மேற்கொள்ளும் வகையில் கற்கள் பதிப்பு, ஆபரண மின் விளக்குகள், இருக்கைகள், சிறுவர் விளையாட்டு உபகரணங் கள் போன்றவை அமைக் கப்பட்டன.
ஆனால், பொலிவு பெற்ற இக்குளத்துக்கு நீர் வரத்து இல்லாததால் வடு கிடந்தது. இக்குளத்துக்கு கல்லணைக் கால்வாயிலிருந்து மாநக ராட்சி நிர்வாகத்தினர், பொது மக்கள் இணைந்து ஏறத்தாழ ஆயிரத்து 400 அடி நீளத் துக்கு குழாய்கள் அமைத்து புதன்கிழமை தண்ணீர் கொண்டு வந்தனர். இதை மேயர் சண். ராமநாதன், பொதுமக்கள் புதன்கிழமை காலை மலர் தூவி வர வேற்றனர்.
இதையடுத்து, செய்தி யாளர்களிடம் மேயர் கூறு கையில், தஞ்சாவூர் மாநகரி லுள்ள 35-க்கும் அதிகமான குளங்களை அழகி குளம் போல நவீனப்படுத்த நட வடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. பல குளங் கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதை அகற்றி குளத்தை மேம்படுத்தி தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர். அப்போது, துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மண்டலக் குழுத் தலைவர் எஸ்.சி. மேத்தா, மாமன்ற உறுப்பி னர் வீ. செந்தில்குமாரி உள் ளிட்டோர் உடனிருந்தனர்.