districts

img

ஆலவயல் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பொன்னமராவதி, ஜூலை 3- பொன்னமராவதி ஒன்றியம் ஆலவயல் ஊராட்சி பகுதியில் உள்ள துலுக்க ஊரணி பகுதியில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு பொது குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  ஒரு சிலர் பெரிய அளவில் தொட்டிகள் அமைத்து தண்ணீரை பயன்படுத்துவதால், பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் பொது குழாய்களில் மிகக் குறைந்த அளவே தண்ணீர் வருகிறது என கூறப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெண்கள், 100 நாள் வேலைக்கு காலை 7 மணிக்கே செல்லும் பெண்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

;