திருச்சிராப்பள்ளி, டிச.13 - தரமற்ற முறையில் குடி யிருப்புகள் கட்டியதை கண்டித்து டிச.17 அன்று குடி யேறும் போராட்டம் நடத்தப்ப டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருச்சி மாந கர் மாவட்டக் குழு தெரி வித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா வெளியிட்டுள்ள செய் திக் குறிப்பில் தெரிவித்தி ருப்பதாவது: திருச்சி தாராநல்லுர் கல்மந்தையில் கடந்த அதி முக ஆட்சியில் குடிசை மாற்று வாரியத்தால் பல கோடி ரூபாய் செலவில் 192 வீடுகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப் பட்டு இன்றுவரை பயனாளி களுக்கு வழங்கப்படாமல் உள்ளது.
இந்த வீடுகள் படுமோச மான முறையிலும், தரமற்ற கட்டுமானப் பணிகளும் நடந் தேறியுள்ளன. சென்னை புளியந்தோப்பு அடுக்குமாடி வீடுகளை போலவே சுவற் றின் மீதுள்ள சிமெண்ட் பூச்சு கைவைத்து தேய்த்தாலே உதிர்ந்து கொட்டும் நிலை யிலும், தரமற்ற முறையில் கத வுகளும், மின் சாதன பொருட் கள் மற்றும் குடிநீர், மழை நீர் குழாய்கள் பொருத்தப்பட் டுள்ளன. இதிலிருந்து நீர் கசிவு உள்ளது. வெளிப்புற மாடி கைப் பிடி சுவரில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. எனவே மேற்கண்ட 192 குடியிருப்புகளின் கட்டிட தரம் குறித்தும், பொது மக்கள் குடியேற தகுயானது தானா என்பதை திருச்சி என்.ஐ.டி ஆய்வு குழு மூலம் சோதனையிட வேண்டும். கட்டிட ஒப்பந்ததாரரிடமும், மேற்பார்வை செய்த அரசு பொறியாளர் மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகளி டமும் உரிய விசாரணை நடத்த வேண்டும். ஏற்கனவே பட்டியலில் உள்ள பயனாளிகளை முறை யாக தேர்ந்தெடுத்து வீடு களில் மராமத்து பணிகளை முடிக்க வேண்டும். இந்த விஷயத்தில் மாவட்ட ஆட்சி யர் உரிய தலையீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண் டும்.
மேற்கண்ட தரமற்ற வீடு களை கட்டியதை கண்டித் தும், உரிய விசாரணை கோரி யும், வீடு ஒதுக்கப்படாமல் காத்திருக்கும் பயனாளி களுக்கு முன் தொகை பெறா மல், சென்னையை போல் இலவசமாக மேற்கண்ட குடியிருப்புகளை ஒதுக்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருச்சி மாந கர் மாவட்டக்குழு சார்பில் டிசம்பர் 17 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு ஜெயில்பேட் டையில் உள்ள குடிசை மாற்று வாரிய செயற்பொறி யாளர் அலுவலகத்தில் குடி யேறும் போராட்டம் நடை பெற உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள் ளார்.