districts

img

மோடி அரசை கண்டித்து நடைபயண பிரச்சார இயக்கம்

நாகப்பட்டினம், மார்ச் 2-  விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்கள், தொழிலாளர்கள் விரோத, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து ஏப்ரல் 5-ஆம் தேதி தில்லி நாடாளுமன்றத்தின் முன்பு முன்பு நடைபெறும் பேரணி ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக மாநிலம் தழுவிய பிரச்சார நடைபாதை  இயக்கம் பிப்ரவரி 23 முதல் மார்ச் 10 வரை நடைபெறுகிறது. இதனொரு பகுதியாக நாகப் பட்டினம் மாவட்டம் பாப்பா கோவில் ஊராட்சியில் நடைபயண பிரச்சார இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.  நிகழ்வில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கோவை.சுப்ரமணியன், விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்டச்செயலாளர் எம்.முருகையன், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.தங்கமணி, சிபிஎம் நாகை தெற்கு ஒன்றியச் செயலாளர் ஏ.வடிவேல், நகரச் செயலாளர் க. வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.