districts

img

வீட்டுவரி ரசீது கேட்டு காத்திருப்புப் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, மே 26-

    திருச்சிராப்பள்ளி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட உத்தமர்சீலி கிராமத்தில் தமிழக அரசு வீட்டுமனை பட்டா வழங்கி யும், வீட்டுவரி ரசீது, குடிநீர்இணைப்பு போன்றவற்றை வழங்க மறுக்கும்  உத்தமர்சீலி ஊராட்சி குறித்து அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தும் பலமுறை முறையிட்டும்  நடவ டிக்கை எடுக்காததைக் கண்டித்தும் வீட்டு வரி ரசீது வழங்க  வலியுறுத்தி யும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநகர் மாவட்டக் குழு சார்பில் வெள்ளியன்று அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலு வலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநகர் மாவட்டத் தலைவர் தங்கதுரை தலைமை வகித்தார். மாநிலச் செயலா ளர் மாரியப்பன், மாவட்டச் செயலாளர் ராஜேஷ்கண்ணா, மாவட்டத் துணைத்தலைவர் செல்வராஜ், மாவட்டப் பொருளாளர் இளங்கோ வன், ஒன்றியச் செயலாளர் ஜோதிமுருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், வீரமுத்து உட்பட ஏராள மானோர் கலந்துகொண்டனர்.

    தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெரால்டு தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சம்மந்தபட்ட இடத்தை சர்வேயர்  மூலம் அளந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட் டது.