districts

img

ஊதிய உயர்வு கேட்டு தையல் கூட்டுறவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, அக். 18 - தையல் கூட்டுறவு சங்க  தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் ஊதிய  நிலுவையை வழங்கக் கோரி புதனன்று (அக்.18) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு மற்றும் அரசு உதவி  பெறும் பள்ளி குழந்தை களுக்கு தமிழ்நாடு அரசு  இலவச சீருடை வழங்குகி றது. 97 மகளிர் தையல் கூட்டு றவு சங்கங்களின் மூலம் சீரு டைகள் தைக்கப்படுகிறது. துணி தைப்பவர் களுக்கு டவுசர் ரூ.18.45, சின்ன  குட்டை பாவாடை ரூ. 13.50,  பேண்ட் ரூ.46.15, பெரிய சட்டை ரூ. 23.10, பாவாடை ரூ.13.80, சுடிதார் பேண்ட் ரூ.12, சுடிதார் டாப் ரூ.14, கோட் ரூ.25 என கூலி வழங்கப்படுகிறது. கூட்டுறவு சங்கங்க ளுக்கு அரசு உரிய காலத் தில் பணம் வழங்காததால், தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் கூலி கிடைப்பதில்லை. இந்த கூலியிலும், லேபிள்கள் 40 பைசா, ஜிப்புக்கு ரூ.2.90, காலருக்கு ரூ.2, கட்டிங் பீஸ் சிக்கன சிறுசேமிப்பு 6 முதல் 10 விழுக்காடு என  பிடித்தம் செய்து கொள் கின்றனர். இந்த நிலையில், தையல் கூட்டுறவு உறுப்பினர்க ளுக்கு 2015 முதல் வழங்கப் படாமல் உள்ள கூலி உயர்வு வருடந்தோறும் உயர்த்தி வழங்க வேண்டும், உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை தர வேண்டும்.

விதிப்படி ஆண்டுக்கு 6 பொதுக்குழு கூட்டங்கள் நடத்தி ஈவு (டிவிடண்ட்) வழங்க வேண்டும்,பள்ளி சீருடை துணிகள் எடுத்துச் செல்லும் போது பேருந்துகளில் கட்ட ணம் வசூலிக்க கூடாது, சங்கங்களில் புதிய உறுப் பினர்களை சேர்க்க வேண் டும், தையல் எந்திரங்க ளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சென்னை பெருநகர தையல் தொழிலாளர்கள் சங்கம் - வடசென்னை, சென்னை மற்றும் புறநகர் தையல் தொழிலாளர்கள் சங்கம் - மத்திய சென்னை, தென்சென்னை மற்றும் புறநகர் தையல் தொழிலாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில்  இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதனைத் தொடர்ந்து சமூக நலத் துறை இணை ஆணையர் உமாதேவியை சந்தித்து தலைவர்கள் பேச்சு நடத்தினர். சங்கத்தின் தென் சென்னை மாவட்டச் செயலா ளர் ஜி.ஜெயராமன் தலை மையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநில துணைத்தலைவர் எம்.தனலட்சுமி, மாவட்டச்  செயலாளர்கள் பா.பால கிருஷ்ணன் (தென்  சென்னை), சி.திருவேட்டை (மத்திய சென்னை), சு.லெ னின் சுந்தர் (வடசென்னை), வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் ஆர்.  மணிமேகலை, தமிழ்நாடு தையல் கலைஞர்கள் சம்மேளன தலைவர் பி.சுந்த ரம், துணைத்தலைவர்கள் பி.கோவிந்தசாமி, எஸ்.டி.ராேஜந்திரன், வடசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.குணசேகர், சம்மேளன குழு உறுப்பி னர் எம்.ஆனந்தன் உள்ளிட்டோர் பேசினார்.