திருச்சிராப்பள்ளி, ஜன.5- திருச்சி மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்றத் தொகுதி களுக்குமான இறுதி வாக்காளர் பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவ லர் மற்றும் மாவட்ட ஆட்சியரால் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன் கிழமை இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி களின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். தஞ்சாவூர் 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் 10 லட்சத்து 4 ஆயி ரத்து 678 ஆண் வாக்காளர்கள், 10 லட்சத்து 65 ஆயிரத்து 559 பேர், மூன்றாம் பாலினத்தவர் 161 பேர் என மொத்தம் 20 லட்சத்து 70 ஆயிரத்து 398 பேர் இடம் பெற்றுள்ளனர். கரூர் கரூர் மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீ கரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர் வெளி யிட்டார். கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதி களிலும் சேர்த்து 4,35,204 ஆண் வாக்காளர்களும், 4,70,098 பெண் வாக்காளர்களும், 92 இதர வாக்காளர்களும் என மொத்தம் 9,05,394 வாக்காளர்கள் உள்ளனர். தற்போது வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் நகல், அனைத்து வாக்குச் சாவடிகள், வட்டாட்சியர் அலுவ லகங்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் ஜன.31 வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு அதில் அவர்களது பெயர் புகைப்படம் இதர பதிவுகள் சரியாக உள்ளதாக என்பதை உறுதி செய்து கொள்ளலாம். வாக்காளர்களுக்கு எற்படும் அனைத்து சந்தேகங்களுக்கு தீர்வாளிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வாக்காளர் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து தக வல்கள், பின்னூட்டங்கள், ஆலோசனைகள் மற்றும் புகார்கள் ஆகியவற்றை 1950 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு அழைத்து தெரிவிக்கலாம்.