மயிலாடுதுறை, ஏப்.4 - மயிலாடுதுறை மாவட் டம், தரங்கம்பாடி அருகே யுள்ள பொறையார் தரங்கை பேராயர் மாணிக் கம் லுத்தரன் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பொறையார் தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்த ரன் கல்லூரி சார்பாக நடை பெற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணிக்கு கல்லூரி முதல்வர் ஜான்சன் ஜெயக்குமார் தலைமை வகித்தார். கல்லூரி வணிக வியல் துறை தலைவர் சேவி யர் செல்வகுமார் முன் னிலை வகித்தார். தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா, தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பேசி, பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியானது கல்லூரி யில் தொடங்கி பொறையார் பேரூராட்சிக்குட்பட்ட முக்கிய வீதிகள் வழியாக, புதிய பேருந்து நிலையம் வரை சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது. நிகழ்ச்சியில் தரங்கம் பாடி வட்டாட்சியர் மகேஷ், மண்டல துணை வட்டாட்சி யர் சக்திவேல், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் வருவாய் துறை அலுவ லர்கள் கலந்து கொண்ட னர். தேர்தல் துணை வட்டாட் சியர் பாபு நன்றி கூறினார்.