districts

img

வாக்காளர் தின விழிப்புணர்வு கோலப்போட்டி

தூத்துக்குடி, ஜன. 27- 14ஆவது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு எவ்வித அச்சமும் இன்றி சுய முடிவுடன் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரங்கோலி கோலப்போட்டி நடத்தப்பட்டது தூத்துக்குடி வஉசி கல்லூரி முன்பு நடைபெற்ற இந்த ரங்கோலி கோலப்  போட்டியில் மாநகராட்சி ஒப்பந்த பெண் பணியா ளர்கள் நூற்றுக்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டு பல விதமான வண்ணங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய கோலங்களை வரைந்தனர். இந்த  விழிப்புணர்வு ரங்கோலி கோலங்களை மாவட்ட ஆட்சித் தலைவர்  லட்சுமிபதி நேரில் பார்வை யிட்டு கோலங்களை வரைந்த பெண் ஊழியர் களை பாராட்டினார்.