திருச்சிராப்பள்ளி, ஆக.16-
திருச்சி கோட்டை காவல் நிலைய சர கத்துக்கு உட்பட்ட பத்திரம் பேருந்து பகுதி யில் இந்திரா காந்தி தனியார் பெண்கள் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி விடுதி யில் ஏராளமான மாணவிகள் தங்கிப் படிக் கின்றனர்.
இந்நிலையில் விடுதி அறையில் தங்கி படிக்கும் மாணவிகள் கடந்த சனிக்கிழமை இரவு சப்பாத்தி சாப்பிட்டதாக தெரிகிறது. அன்றிலிருந்து அவர்களுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்று உபாதை இருந்துள்ளது. செவ்வாயன்று இரவு விடுதி அறையில் உள்ள மாணவிகள், தோசை சாப்பிட்ட பிறகு மீண்டும் பிரச்சனை இருந்ததால் திருச்சி சிங்காரத் தோப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் 15 மாணவிகளும், எஞ்சிய மாணவிகள் 12 பேர், திருச்சி பாபு சாலையில் உள்ள தனி யார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதில் புறநோயாளியாகவும், உள் நோயாளியாகவும் சிகிச்சை பெற்ற 27 பேரும் குணமாகி புதனன்று கல்லூரிக்கு திரும்பினர். தற்போது மீண்டும் புதிதாக 12 மாணவிகள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர். இதற்கிடையில், தகவலறிந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மகளிர் விடுதிக்கு சென்று ஆய்வு நடத்திய பிறகு, அங்கி ருந்த உணவுக் கூடத்தை பூட்டி சீல் வைத்த னர்.