அமைச்சர் வி.என்.வாசவன் தகவல் திருவனந்தபுரம், ஜன. 7- விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகம் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் செயல் பாட்டுக்கு வரும். மே மாதத்திற்குள் கட்டுமான பணிகள் நிறைவடைந்து தயார் நிலையை எட்டும். பின்னர் சோதனை ஓட்டம் நடத்தப்படும். எப்போது செயல்படுத்துவது என்பதை அரசு முடிவு செய்யும் என அமைச்சர் வி.என்.வாசவன் தெரிவித்தார். துறைமுக அமைச்சரான பிறகு விழிஞ்ஞம் துறைமுகத்தை வி.என்.வாசவன் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், துறைமுக கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வரு கின்றன. ஒவ்வொரு மாதமும் கட்டு மானப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும். துறைமுகத்தை சுற்றி சுவர் கட்டப்படும். புகார்கள் குறித்து மனுதாரர்களிடம் பேசி தீர்வு காணப்படும். அரசாங்கம் மோதல் போக்கில் செல்லவில்லை. துறைமுகம் அமைப்பது தொடர்பாக கடந்த காலங் களில் புகார்கள் எழுந்தன. அவை சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி தீர்வு காணப்பட்டன. இந்த திட்டத்திற்கு உள்ளூர் மக்கள் மற்றும் சமூக தலைவர்களின் ஆதரவு உள்ளது. துறைமுகம் கட்டும் அதானி போர்ட்ஸ் நிறுவனத்துடன் மத்திய, மாநில அரசுகள் ஒப்பந்தம் செய்ய வேண்டும். கட்டுமானத் தாமதத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரி அரசுக்கும் அதானி துறைமுகத்துக்கும் இடையே உள்ள புகார்கள் சுமுகமாகத் தீர்க்கப் படும் என்றும் அமைச்சர் கூறினார். துறைமுகத் துறை முதன்மைச் செய லாளர் கே.எஸ்.ஸ்ரீனிவாஸ், விழிஞ்ஞம் இன்டர்நேஷனல் சீபோர்ட் லிமிடெட் (விஐஎஸ்ஐஎல்) எம்டி திவ்யா எஸ் அய்யர், அதானி விழிஞ்ஞம் துறை முகத்தின் (ஏவிபிபிஎல்) சிஇஓ ராஜேஷ் ஜா மற்றும் விஐஎஸ் மற்றும் ஏவிபி பிஎல் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.