districts

img

15 ஆயிரம் பனை விதைகள் நட்ட கிராம மக்கள்

திருவள்ளூர், அக்.18- திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அருகே அவுரிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பாக்கம் கிராமத்தில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள மிகப்பெரிய ஏரி உள்ளது. முன்பு இப்பகுதியில் ஏராளமான பனை மரங்கள் நிறைந்து காணப்பட்டது பனை மரத்தில் பல்வேறு பயன்களை பொதுமக்கள் அனுபவித்தனர். இந்த நிலையில் தற்போது அந்த பனை மரங்கள் யாவும் காணாமல் போய்  உள்ளது. இதை உணர்ந்த அப்பகுதி மக்கள் மிச்சம் இருக்கும் பனை மரங்க ளின் விதைகளை சேகரித்து பாக்கம் ஏரிக்கரை பகுதியில் நடுவதற்கு புதனன்று (அக் 18),  ஒன்று திரண்டனர். சுமார் 15,000 விதைகளை கிராம மக்களே முன்வந்து ஏரிக்கரை பகுதிகளில் நடும்  பணியில் ஈடுபட்டனர். பெண்கள், வயதான வர்கள்,வாலிபர்கள்,சமூக ஆர்வலர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த பனை விதைகளை நட்டனர். ஏரிக்கரைகளை பாதுகாக்க வேண்டும்  என ஆர்வத்துடன் இப்பணிகளை அவர்கள் மேற் கொண்டனர். சமூக ஆர்வலர் சக்கரவர்த்தி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவுரிவாக்கம் ஊராட்சி மன்ற  தலைவர் முத்தழகி  ராஜி, துணைத் தலைவர்  செல்வி தீபன்,சமூக ஆர்வலர் ஹாஜா மொய்தீன், வார்டு உறுப்பினர்கள் கிராம பெரியோர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.