districts

img

ஏரியில் மடைகளை சரிசெய்ய கிராம மக்கள் கோரிக்கை

அறந்தாங்கி, அக்.10-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மணமேல்குடி தாலுகா கிளாரவயல் கிராமத்தில் உள்ள 400 ஏக்கர் பரப்பு கொண்ட கண்மாயில் மடை மணல்க ளால் மூடி உள்ளதால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.  கண்மாயில் உள்ள 5 மடைகளும் மணல்களால் அடைத்து சேதமுற்றும், உடைந்தும் பாழாகியுள்ளது. அத னால் தற்போது மழைக்காலம் என்பதால் மழை பெய்து கண்மாய் நிரம்பினால், கண்மாயில் உள்ள தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்திடும் அபாயம் உள்ளது. இது குறித்து, பலமுறை அதிகாரியிடம் மனு அளித்தும் எந்த  ஒரு அதிகாரிகளும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை  என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, உடனடியாக மடைகளை சரி செய்யுமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.