districts

img

டெல்டா மாவட்டங்களில் கிராம சபைக் கூட்டங்கள்

அரியலூர், நவ.1- உள்ளாட்சித் தினத்தை யொட்டி டெல்டா மாவட்டங்களின் பல்வேறு ஊராட்சிகளில் புத னன்று கிராம சபைக் கூட்டம் நடை பெற்றது. கூட்டங்களில், கிராம ஊராட்சி  நிர்வாகம், பொதுநிதி செலவினம், திட்டப் பணிகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, சிறப்பாக பணி புரிந்த ஊழியர்களை கௌர வித்தல், சிறப்பாக செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக் களுக்கு பாராட்டு தெரிவித்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக் கப்பட்டது. ஆண்டிமடத்தை அடுத்த வாரியங்காவல் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத் தில் மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா பேசினார். பின்னர் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை  பெற்றார். இதில், ஊரக வளர்ச்சி  முகமைத் திட்ட இயக்குநர் இலக்குவன், ஊராட்சிகள் உதவி  இயக்குநர் தமிழ்செல்வன், வாரியங் காவல் ஊராட்சித் தலைவர் மணி சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். எருத்துக்காரன்பட்டி ஊராட்சி யில், அதன் தலைவர் சிவா(எ)பரமசிவம், கோவிந்தபுரத்தில் ஊராட்சித் தலைவர் மா.முரு கேசன், துணைத் தலைவர் அ. அம்பிகா, ஓட்டக்கோவிலில் ஊராட்சித் தலைவர் செங்கமலை, துணைத் தலைவர் ம.செல்வி, தாமரைக்குளத்தில் ஊராட்சித் தலைவர் நா.பிரேம்குமார், துணைத்  தலைவர் கவிதா முருகேசன், வாலாஜா நகரத்தில் ஊராட்சித்  தலைவர் அபிநாய இளையராஜா,  துணைத் தலைவர் மு.குண சேகரன் ஆகியோர் தலைமை வகித் தனர். திருச்சிராப்பள்ளி திருச்சி உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், பச்சைமலை தென்புறநாடு ஊராட்சி புத்தூர் கிராமத்தில் புதனன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், ஆவ ணத்தான்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத் தில் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா பங்கேற்றார். சிறப்பாக  பணிபுரிந்த தூய்மைப் பணியா ளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் கள், பயனாளிகளுக்கு கடனுதவி கள், மரக்கன்றுகளை வழங்கினார். பாபநாசம் தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசம் அருகே அய்யம் பேட்டையை அடுத்த கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சியில் கிராம  சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். திருக்கருக்காவூரில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்  பங்கேற்றார். இதேபோன்று உள்ளிக்கடை, சரபோஜிராஜ புரம், ராஜகிரி, ரெகுநாதபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளிலும் கிராம  சபை கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் திருவாரூர் மாவட்டம் கோட் டூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட  ஆட்சியர் தி.சாரூஸ்ரீ சிறப்புரை யாற்றினார்.  கரூர் கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி  ஒன்றியத்துக்கு உட்பட்ட முள்ளிப்பாடி ஊராட்சி சேர்வைக் காரன்பட்டியில் நடைபெற்ற கூட்டத் திற்கு ஊராட்சி மன்றத் தலைவர்  நீலா வேல்முருகன் தலைமை வகித்தார்.