districts

img

‘வாச்சாத்தி வழக்கும் தீர்ப்பும்’ வெற்றி விழா பேரவை

அரியலூர், நவ.21- ஜெயங்கொண்டம் அருகே  அணைக்குடம் கிராமத்தில் வாச்சாத்தி  வழக்கும் தீர்ப்பும், வெற்றி விழா,  மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகே உள்ள அணைக் குடம் கிராமத்தில் தமிழ்நாடு விவசா யிகள் சங்கம், அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் ‘வாச் சாத்தி வழக்கும் தீர்ப்பும்’ வெற்றி விழா மாவட்ட பேரவை நடைபெற்றது. பேர வைக்கு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் செந்தில்வேல் தலைமை வகித்தார்.  விவசாயிகள் சங்க மாநில இணைச்  செயலாளர் எஸ்.துரைராஜ், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க  மாநிலப் பொருளாளர் எஸ்.பழனிச் சாமி, வி.ச.மாவட்டச் செயலாளர் இரா. மணிவேல், வி.தொ.ச மாவட்டச் செய லாளர் கந்தசாமி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் இளங்கோவன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் அம்பிகா, வாலி பர் சங்க மாவட்டத் தலைவர் ரவீந்தி ரன், சிஐடியு மாவட்டத் தலைவர் கிருஷ்ணன், சிஐடியு மாவட்டச் செயலா ளர் துரைசாமி, வி.ச. மாவட்டச் செய லாளர் தங்கராசு, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்டத் தலை வர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்டச் செய லாளர் மகாதேவன், சிபிஎம் தா.பழூர்  ஒன்றியச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். இதில் விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யா மறைவையொட்டி, அவரது உருவப் படத்திற்கு மாலை  அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.