தஞ்சாவூர், ஆக.18-
வேங்கராயன் குடிக்காட்டில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் கட்டுவ தற்கு அடிக்கல் நாட்டு விழா நடை பெற்றது.
தஞ்சாவூர் அருகே, வேங்கராயன் குடிக்காட்டில் கடந்த சில ஆண்டுகளாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் தற்காலிக கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இதையடுத்து நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி நிரந்தர நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையத்திற்கான கட்டி டம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த கட்டிடத்தில், அலு வலக அறை, நெல் மூட்டைகள் சேமிக் கும் இடம் மற்றும் களம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.
விழாவில், தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.பிரபாகரன், பொறியாளர் ஜோஸ்வா, ஊராட்சி மன்றத் தலைவர் முத்துக் குமாரசாமி, ஊராட்சி செய லாளர் வனிதா, மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்ட பணித்தள பொறுப் பாளர் இந்திரா மற்றும் முன்னோடி விவ சாயிகள் கலந்து கொண்டனர்.