districts

திருச்சி முக்கிய செய்திகள்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

நாகப்பட்டினம், ஆக.29  நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆண்டு பெரு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா ஆகஸ்ட் 29 அன்று  துவங்கி, செப்டம்பர் 8 வரை நடைபெறு கிறது. இவ்விழாவிற்கு பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து நடைபயண மாகவே பக்தர்கள் கடந்த ஒரு வாரமாக வந்துள் ளனர்.  திருவிழாவின் முதல் நிகழ்வாக செவ்வாயன்று மாலை கொடி பவனி நடை பெற்று, பேராலயத்தின் அருகில் கொடி ஏற்றத்துடன் விழா துவங்கியது.  ஆன்மீகத் தலமாகவும், சுற்றுலாத் தல மாகவும் விளங்கும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு திரு விழாவிற்கு, ஆண்டுதோறும் பல லட்சக்கணக் கான மக்கள் ஒன்றுசேர்ந்து வருகின்றனர். சமய நல்லிணக்க பூமியாக திகழும் நாகப் பட்டினம் மாவட்டத்தின் மிக முக்கிய திரு விழாவாக இந்த திருவிழா கொண்டாடப் படுகிறது. இந்த திருவிழாவையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்க ளின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட  நிர்வாகத்தின் மூலம் குடிநீர், சுகாதாரம், கழிப் பறை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதி கள் செய்யப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை தவிர்க்க, மாநிலம் முழுவதுமிருந்து போக்கு வரத்து கழகத்தின் மூலம் கூடுதலான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. காவல்துறையினர் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டுள்ளனர். முக்கியமான இடங்களில்  கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. ஹோட் டல் உள்ளிட்ட தனியார் விடுதிகளில் பக்தர் களுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமா னவையா என்று பரிசோதிக்க, உணவு பாது காப்பு அலுவலர்களின் சோதனை நடந்து வரு கிறது. 10 தினங்களும் நடைபெறும் விழா நிகழ்வு களை அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகங்கள்  வழியாக கண்டுகளிக்க வேளாங்கண்ணி பேராலய நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. செப்.7 அன்று பெரிய தேர் பவனி நடைபெறும். அன்றைய தினம் பல லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை முன் னிட்டு அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் பேராலயத்தின் சார்பிலும் எடுக்கப்பட்டு வருகிறது.

செப்.7 மறியல் போராட்டம் நாகையில் 8 ஆயிரம் பேரை பங்கேற்கச் செய்ய முடிவு

நாகப்பட்டினம் ஆக.29 - விலைவாசி உயர்வு, வேலையின்மை, வெறுப்பு அரசியல்  என ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக் கையை மக்களுக்கு வெளிப்படுத்தும் வகையில், செப்டம்பர்  7 அன்று மாநிலம் தழுவிய ரயில் மறியல் மற்றும் ஒன்றிய அரசு  அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் வடக்கு-தெற்கு ஒன்றியம், கீழையூர் கிழக்கு-மேற்கு ஒன்றியம், கீழ்வே ளூர் வடக்கு-தெற்கு ஒன்றியம், தலைஞாயிறு, நாகை வடக்கு-தெற்கு ஒன்றியம், நாகை நகரம், திருமருகல் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் போராட்டத் தயாரிப்புக் கான சிறப்பு பேரவை  நடைபெற்று வருகிறது. செப்.7 மறியலில் மாவட்டம் முழுவதும் இருந்து 8000 பேரை பங்கேற்கச் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. திருமருகல் ஒன்றியத்தில் நடைபெற்ற சிறப்பு பேர வையில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி செங்கொடி ஏற்றி, உரையாற்றினார். இதில் திருமருகல் ஒன்றியச் செயலாளர் எஸ்.ஸ்டாலின்பாபு, ஒன்றியக் குழு உறுப் பினர்கள் கலந்து கொண்டனர்.

ஓயாமரி தகன மையம் மூடல்
 

திருச்சிராப்பள்ளி, ஆக.29 - திருச்சி மாநகராட்சி ஓயாமரி நவீன எரிவாயு தகன மையத்தில் புதன்கிழமை (ஆக.30) முதல் செப்.7 வரை பழுது  நீக்கும் பணி நடைபெற உள்ளதால், தகன மையம் தற்காலிக மாக மூடப்படுகிறது. இதனால் மையத்தில் சடலங்கள் தகனம்  செய்யும் பணி மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பதிலாக ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகரில் உள்ள நவீன  எரிவாயு தகன மையத்தினை பயன்படுத்திக் கொள்ள மாநக ராட்சி ஆணையர் வைத்தியநாதன் கேட்டுக் கொண்டுள்ளார். 

நெல் கொள்முதலில் எடை மோசடி: 12 பேர் பணியிலிருந்து நீக்கம்

கும்பகோணம், ஆக.29 - நெல் கொள்முதலில் எடையில் வித்தி யாசம் செய்து ரூ.57 ஆயிரம் வரை மோசடி நடந்து இருப்பது கண்டறியப்பட்டது. இத னால், கொள்முதல் நிலையத்தில் பணி யாற்றிய அனைத்து பணியாளர்களும் பணி யில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சாய்னாபுரம் அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையத்தில் தமிழ்நாடு நுகர்பொ ருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் அண்ணாதுரை திடீரென திங்கட்கிழமை ஆய்வு செய்தார்.  ஆய்வில், கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளில், 20 மூட்டைகளை எடுத்து மறு எடை பார்க்கப்பட்டது. அதில் அரசு நிர்ண யிக்கப்பட்ட அளவைவிட எடையளவில் வித்தியாசம் காணப்பட்டது. இந்த எடை மோசடி மூலம், நெல் கொள்முதல் நிலையத்தில் ரூ.57 ஆயிரம் அளவுக்கு முறை கேடுகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டது.  இதையடுத்து, பருவகால உதவியாளர் இளையராஜா, பணியினை கண்காணிக்க தவறிய கொள்முதல் அலுவலர் கோவிந்த சாமி மற்றும் கொள்முதல் நிலைய மேஸ்திரி,  சுமை தூக்கும் பணியாளர்கள் உட்பட 12  பேர் உடனடியாக பணியிலிருந்து நீக்கப் பட்டனர். ஆய்வின்போது, தமிழ்நாடு நுகர்பொ ருள் வாணிபக் கழக தஞ்சாவூர் மண்டல  முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ் வரி, கும்பகோணம் அலகு துணை மேலாளர்  இளங்கோ, தமிழ்நாடு நுகர்பொருள் வாணி பக் கழக தலைமை பொறியாளர் ராஜாமோ கன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் 14 குளங்கள் சீரமைக்கப்படும்: மேயர் தகவல்

தஞ்சாவூர், ஆக.29- தஞ்சாவூரில் மேலும் 14 குளங்கள்  ரூ.26.15 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட வுள்ளன என மேயர் சண்.ராமநாதன் தெரி வித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை மாலை தெரிவித்ததாவது: ஒன்றிய அரசின் பொலிவுறு நகரத் திட்ட  விருதுக்கு கலாச்சார பிரிவில் அய்யன்குளம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருது குடியரசுத் தலைவரால் செப்டம்பர் 27,  28 தேதிகளில் வழங்கப்படவுள்ளது. எனவே,  இக்குளத்தை மாநகர மக்களும், இதைச் சுற்றி வசித்து வரும் மக்களும் அசுத்தம் செய்யா மல், சேதப்படுத்தாமல் பாதுகாக்க வேண்டும். மாவட்டத்தில் மேலும் 14 குளங்கள் ரூ.26.15 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட வுள்ளன. தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவில் பொலி வுறு நகரத் திட்டப் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இருக்கைகள் உள்பட  சில பணிகள் மீதம் உள்ளன. இப்பணிகளும் நிறைவேற்றப்பட்டு இரு மாதங்களில் திறக்கப் படும். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரே யூனியன் கிளப் பின்புறமுள்ள இடத் தில் குறைந்த கட்டணத்தில் வாகன நிறுத்து மிடம் அமைக்கப்பட உள்ளது. தஞ்சாவூர் கீழ வாசல், வெள்ளைப் பிள்ளையார் கோயில்  அருகே தற்காலிகமாகச் செயல்படும் மீன்  சந்தை, அருகிலுள்ள இடத்துக்கு மாற்றப்படவுள்ளது. இதற்கு தேவையான  பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளன. தற்போது மீன் சந்தை உள்ள இடத்தில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும். மாநகரில் தார்ச்சாலை அமைக்கும் பணி  60 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதில்,  புதை சாக்கடை திட்டத்துக்குப் பிறகு போடப் படாமல் இருந்த குறுக்கு சாலைகள், குறுக்கு  சந்துகளிலும் தார்ச்சாலை அமைக்கப்படு கிறது. மீதமுள்ள 40 விழுக்காடு பணி களும் 2024 மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்ப டும். அனைத்து சாலைகளிலும் புதிதாக  எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்தப்பட வுள்ளன. ராஜ வீதிகளில் புதை மின் தடங்கள்  அமைக்கப்பட்டு, சாலையை அகலப்படுத்தி  தார்ச்சாலை போடப்படும். மேலும், அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்படும். மாநகரில் 29 இடங்களில் மழைநீர் வடிகால் வசதி செய்யப்படுகிறது. மாநகரில் பயன்பாட்டில் இல்லாமல் மிக மோசமான நிலையிலுள்ள 44 பூங்காக்களில் சீரமைப்பு  பணி மேற்கொள்ளப்பட்டு, புதிதாக விளை யாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட வுள்ளன. இப்பூங்காக்கள் தனியார் பரா மரிப்பில் விடப்படவுள்ளன. இவ்வாறு மேயர் தெரிவித்தார்.

பி.எட்., எம்.எட்., நேரடிச் சேர்க்கை  செப்.15 வரை நீட்டிப்பு

தஞ்சாவூர், ஆக.29 -  தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வியியல் மற்றும் மேலாண் மையியல் துறையில் இளங்கல்வியியல் (பி.எட்.,) இரண்டா மாண்டு முழுநேரப் பட்டப்படிப்பு மற்றும் கல்வியியல் நிறை ஞர் (எம்.எட்.,) இரண்டாமாண்டு முழுநேரப் பட்டப்படிப்பிற்கு 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான நேரடிச் சேர்க்கை நடைபெற்று வருகிறது. விண்ணப்பிக்க கால அவகாசம் செப்டம்பர் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சேர்க்கை விண்ணப்பங்களை காலை 10 மணி முதல்  மாலை 5 மணிவரை கல்வியியல் மற்றும் மேலாண்மை யியல் துறையில் நேரிலும், தமிழ்ப் பல்கலைக்கழக இணைய வழியாகவும் பெற்றுக் கொள்ளலாம். சேர்க்கைக்கு ஒருசில  இடங்களே எஞ்சியுள்ள நிலையில் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக இணைய தளமான www.tamiluniversity.ac.in என்ற முகவரியிலும், 04362-226720 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு  கொள்ளலாம் என பதிவாளர் (பொ) முனைவர் சி.தியாகரா ஜன் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக  உதவித்தொகை வழங்க உத்தரவு

அரியலூர் ஆக.29 - அரியலூர் மாவட்டத்திற்கு அனைத்துத் துறை அலுவலர் களுடன் ஆய்வு கூட்டத்திற்கு வந்த உதயநிதி ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்திற்கு திடீரென சென்று, பொதுமக்களிடம் மனு வாங்கினார். இதில், மாற்றுத்திறனாளி உதவித்தொகை வழங்க வேண்டும் எனக் கோரி அழகிய மணவாளபுரம் கிராமத்தைச் சேர்ந்த தவசீலன், கடந்த இரண்டு ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. இதையடுத்து திங்களன்று அரியலூருக்கு வந்த இளைஞர்  நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தவசீலன் மனு அளித்தார். அவரிடம் அமைச்சர், ‘தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை அதிகரிக்கப்பட்டது தெரியுமா?’ என கேட்டதற்கு,  தவசீலன் ‘தெரியாது’ என கூறினார். பின்னர், மாற்றுத்திற னாளி தவசீலனுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க அமைச்சர் உத்தரவிட்டார்.  பல்வேறு துறைகளின் சார்பில் 1735 பேருக்கு ரூ.10.57 கோடி‌ மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

தேசிய விளையாட்டு தினம்: அரசுப் பள்ளியில் கொண்டாட்டம்

அரியலூர், ஆக.29- அரியலூரை அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய விளையாட்டு தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஆதித்யா பிர்லா பொதுப் பள்ளி உடற்கல்வி இயக்குநர் நீலவாணன் பங்கேற்று  கூறுகையில், “புகழ்வாய்ந்த ஹாக்கி வீரர் தியான் சந்த்  பிறந்த நாளான ஆக.29 அன்று முதல் தேசிய விளையாட்டுத்  தினமாக கொண்டாடப்படுகிறது. மூன்று முறை ஒலிம்பிக்கில் ஹாக்கிப் போட்டியில் தங்கம் வெல்ல காரணமாக இருந்த அவ ரின் நினைவாக தேசிய விளையாட்டு தினத்தை கொண்டாடு கிறோம்” என்றார்.  பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,  மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

வரி செலுத்தாத கடைகளுக்கு சீல்
 

புதுக்கோட்டை, ஆக.29 - புதுக்கோட்டை நகராட்சிப் பகுதியில் பல மாதங்களாக வரி  செலுத்தாத கடைகளுக்கு நகராட்சி அலுவலர்கள் செவ்வாய்க் கிழமை சீல் வைத்தனர்.  புதுக்கோட்டை நகராட்சிப் பகுதிகளில் பல்வேறு இடங்க ளில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளன. இந்தக்  கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து வியாபாரிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் மாதந்தோறும் நக ராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை நகராட்சி வரு வாய்த்துறை அலுவலர்கள் வசூல் செய்து வருகின்றனர். இந்நிலையில் சில கடைகள், கடந்த சில மாதங்களாக வரி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து நகராட்சி ஆணையர் (பொ) வீரமுத்துக்குமார் உத்தரவின் பேரில் வருவாய் அலுவலர் (பொ) பாசித் தலைமையில் செவ்வாய்க் கிழமை ஆய்வு செய்தனர். இதில், நகராட்சிக்கு சொந்தமான டவுன் ஹால், சந்தைப்பேட்டை, திருக்கோகர்ணம், ராம லிங்கம் தெருவில் உள்ள 7 கடைகள் பல மாதங்களாக வாடகை  செலுத்தவில்லை. இதனால் நிலுவையில் உள்ள வாடகை கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

இன்று எரிவாயு குறைதீர் கூட்டம்
 

அரியலூர், ஆக.29- அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டாட்சியர் அலுவலக  வளாகத்தில், மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர் வோர் பாதுகாப்புத் துறை சார்பில் புதன்கிழமை (ஆக.30) முற்பகல் 11.30 மணிக்கு எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்  நடைபெறுகிறது. மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதி நிதிகள், எரிவாயு முகவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். எனவே எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர் பான குறைகள் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம் என ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

முதியவர் சிறையில் அடைப்பு
 

கும்பகோணம், ஆக.29- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநா கேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (65) என்பவர் 3  வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திரு நீலக்குடி காவல்துறையில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் ராஜேந்திரனை கைது செய்து, போக்சோ சட்டத்தின்  கீழ் வழக்குப் பதிந்தனர். பின்னர் அவரை திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.