திருச்சிராப்பள்ளி, ஜூன் 2-
திருச்சிராப்பள்ளி ரயில்வே சந்திப் பில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நடைபெறும் கூடுதல் கட்டண வசூல் முறைகேடுகளை தடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘திருச்சி ராப்பள்ளி ரயில்வே சந்திப்பில் செயல்பட்டு வரும் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தொடர்ந்து பல விதமான முறைகேடு கள் நடந்த வண்ணம் உள்ளன.
இரண்டு சக்கர வாகனத்திற்கு 12 மணி நேரத்திற்கு 20 ரூபாயும் அதற்கு மேல் மேலும் 20 ரூபாயும் 24 மணி நேரத்திற்கு மேல் மேலும் 20 ரூபாய் என வசூல் செய்வதும் எந்தவித அறி விப்பும் முறைகளும் இல்லாமல் அடா வடியாக ஒப்பந்தம் எடுத்தவர்கள் சொல்வதே அந்த பகுதியில் எழுதப் படாத சட்டமாக உள்ளது. இதேபோல் 4 சக்கர வாகனங்களுக்கு சில நூறு ரூபாய்கள் பிடுங்கப்படுகிறது.
மேலும் உறவினர்களை வழி யனுப்ப வரும் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களுக்கும் ரயில்வே நிலை யம் முன்பு இடம் ஒதுக்கித் தராமல் ரயில்வே காவல்துறையினரை வைத்து விரட்டியடிக்கப்பட்டு வாகன நிறுத்து மிடத்தில் வைத்து 10 நிமிடத்திற்குக் கூட இரண்டு சக்கர வாகனத்திற்கு ரூ.20-ம், நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.100-ம் வசூலிக்கப்படும் கொடுமை நடந்து வருகிறது.
இதுபோன்ற அடாவடி, மோசடி செயல்களுக்கு திருச்சி கோட்ட வணிகத் துறை அதிகாரிகள் உறுதுணை யாகவும் ஒப்பந்தகாரர்களோடு கைகோர்த்து இது போன்ற முறை கேட்டில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் இவர்கள் குறிப்பிடும் வாகன நிறுத்தம் என்பது மேற்கூரை இன்றி கடும் வெயில் மற்றும் மழையில் முழுவதும் நனைவதும் மழை காலங் களில் சேறும் சகதியுமான இடத்தில் வாகனங்கள் கீழே விழுவதும் கண்கா ணிப்பு கேமரா உள்ளிட்ட எந்த அடிப் படை வசதியும் இல்லாமலேயே உள்ளது.
ஆனால், வசூல் செய்வதே குறி யாக செயல்படும் ஒப்பந்ததாரர் மற்றும் திருச்சி கோட்ட வணிகத் துறை ரயில்வே நிர்வாகத்தை வன்மையாக கண்டிக் கிறோம். ரயில்வே நிலையத்திற்கு டிக்கட் எடுக்கவும் பயணிகளை ஏற்றி விட மற்றும் வரவேற்று அழைத்து செல்பவர்கள் வரும் வாகனங்களை கட்டணமின்றி நிறுத்துவதற்கு இடத்தை ஒதுக்கி தரவும் ரயில் போக்கு வரத்தை பொதுமக்களின் சேவை துறை யாகவே நிலை நிறுத்த வேண்டுமே ஒழிய லாப நோக்கோடு அதை பணம் வசூல் செய்யும் இடமாக மாற்றுவதை கைவிட வேண்டும்.
எனவே, வாகன நிறுத்த வசூல் முறைகேடுகளை களைந்து பயணி களுக்கு போதுமான வசதிகளை செய்து தருவது ரயில்வே நிர்வாகத்தின் கடமை யாகும் என்பதை வலியுறுத்துவதோடு இப்பிரச்சனைகளை தீர்க்கப்பட வில்லை என்றால் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மக்களை திரட்டி ரயில் மறியல் போராட்டத்தை நடத்தும்’’ என தெரிவித்துள்ளார்.