districts

img

வேதாரணியம் வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் அடிப்படை வசதி கேட்டு உண்ணாவிரதம்

வேதாரண்யம், ஆக.17-

      நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் 6,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

      இந்த ஊராட்சியில் குடிநீர், சாலை வசதி, தெரு விளக்கு, மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டி பலமுறை மக்கள் வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லாததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கோவை சுப்பிரமணியன், வேணு, தெற்கு ஒன்றியச் செயலாளர் அம்பிகாபதி, பி.எஸ். பன்னீர்செல்வம் உட்பட ஏராளமானோர் துளசியாபட்டணத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரதத்திற்கு மாவட்டச் செயலாளர் மாரிமுத்து தலைமை வகித்தார்.