பழனி, பிப்.4- திண்டுக்கல் மாவட்டம் பழனி யில் ஆயிர வைசியர் சமூகத்தின் செப்பேடு ஒன்று கண்டறியப்பட் டுள்ளது. பழனி திருமஞ்சனப் பண் டாரம் சண்முகம், தம்முடைய முன் னோர்கள் பாதுகாத்து வைத்திருந்த ஒரு செப்பேட்டை தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தியிடம் கொடுத்து அதனைப் படித்து பொருள்கூறுமாறு கேட்டிருந்தார். செப்பேடு குறித்து ஆராய்ந்த நாராயணமூர்த்தி கூறுகையில், ‘‘3 கிலோ எடையும், 49 செ.மீ. உயர மும், 30 செ.மீ. அகலமும் உடைய இச்செப்பேட்டை நானும் மறைந்த புலவர் இராசுவும் படித்தோம். இச்செப்பேடு ஆயிர வைசியர் சமூகம் தம் குடிகளின் கெதி மோட் சத்துக்காக பழனிமலை முருக னுக்கு திருமஞ்சனம், வில்வார்ச் சினை, தினசரி விழா பூசை செய்ய வேண்டி பழனியில் வசிக்கும் செவ்வந்தி பண்டாரத்துக்கு ஏற் படுத்திக் கொடுத்த திருமஞ்சனக் கட்டளையை விரிவாகக் கூறு கிறது. பண்டைய நாட்களில் ஆயிர வர் வணிகக்குழு என்று புகழ்பெற்று விளங்கிய வணிகக் குழுவினர் தான் தற்போது ஆயிர வைசியர் என்ற பெயரில் விளங்குபவர்கள். இச்செப்பேடு கி.பி.14 ஆம் நூற் றாண்டில் (1363) சோபகிருது ஆண்டு தை மாதம் 25 ஆம் தேதி வியாழக்கிழமை தைப்பூசத் திரு நாளில் பெரிய நாயகி அம்மன் சன்னதி முன்பாக எழுதி வெளி யிடப்பட்டுள்ளது. பழனி ஸ்தானீகம் சின்னோப நாயக்கர், புலிப்பாணி, பழனிக்கவுண்டன் ஆகியோரை சாட்சியாக வைத்து எழுதப்பட்டுள் ளது. செப்பேட்டில் 518 பேர் கை யொப்பம் இட்டுள்ளனர். செப்பேட்டின் முகப்பில் விநாய கர், கைலாசநாதர், பெரியநாயகி, முருகன், செவ்வந்திப்பண்டாரம், ஆயிர வைசியரின் சின்னமான செக்கு ஆகியவை கோட்டுருவ மாக வரையப்பட்டுள்ளன. இச் செப்பேடும் வழக்கமாகப் பழனி பகுதி செப்பேடுகளில் காணப்படும் ‘‘வையம்நீடுக மாமழை மன்னுக’’ எனும் வரியுடன் தொடங்கி முருக னின் புகழ் 5 பாடல்களில் பாடப்படு கிறது.
பின்பு ஆயிர வைசியரின் பிறப் பும் பெயர்க் காரணமும் சுவையான ஒரு புராணக் கதையுடன் சொல்லப் படுகிறது. அக்கதையில் ஆயிர வைசியரின் தோற்றம் பற்றிக் குறிப்பிடும் செப்பேடு வர்ணாசிரம தர்மப்படி ஆயிர வைசியர் பிரம்மா வின் தொடையில் பிறந்தவர்கள் என்று கூறுகிறது. பரமசிவன் உல கைப் படைத்து பிரம்மாவையும் படைத்து பிரம்மாவின் தலையில் பிராமணரையும், தோளில் ராசாக் களையும், தொடையில் வைசியர் களையும் பாதத்தில் சூத்திரனை யும் படைத்தார் என்று கூறுகிறது. சரசுவதி அம்மன் பறித்துப் போட்ட 1000 தர்ப்பைப்புற்கள், 1000 தாமரை இதழ்களில் வக்கு மகிரி கமண்டலத்தில் இருந்து தெளித்த நீரினால் ஆயிர வைசிய குலத்தின் முதல் 1000 ஆண்களும் முதல் 1000 பெண்களும் தோன்றினார்கள் என்று இச்செப்பேடு குறிப்பிடு கிறது. பிறகு இந்த ஆயிரம் பேர் களின் திருமணம் நடந்து அவர் களுக்கு திருமணப் பரிசாக சிவன் அளித்த தராசு உட்பட பல்வேறு கடவுளர் அளித்த திருமணப் பரிசு களை மிக விரிவாகப் பட்டியலிடு கிறது.
இதன் பிறகு ஆயிர வைசிய ரின் குலப்பெருமை விரிவாகக் கூறப்படுகிறது. இவர்கள் மூவேந்த ருக்கு முடி சூட்டும் கையர் என்றும், பன்றி கோழி வளர்க்காதவர்கள் என்றும், ஔவை மகிழ அவருக்கு பொற்படாகம் தந்தவர்கள் என் றும், எதிரியிட்ட பீடத்துக்கு எதிர்ப்பீடம் இட்டவர்கள் என்றும், சோழன் இவர்களிடம் பெண் கேட்டு வந்தபோது வாசலில் கருநாயைக் கட்டிவைத்து சோழனை அவம தித்தவர்கள் என்றும், பாண்டிய னின் செண்டை முறித்தெறிந்து பாண்டியனை தோற்கடித்தவர்கள் என்றும் பொங்கி வந்த காவிரியை பஞ்சால் அடைத்து காவிரிக்கு கரை கண்டவர்கள் என்றும் பலவாறாக இவர்கள் குலப் பெருமை கூறப்படு கிறது. செவ்வந்திப் பண்டாரத்துக்கு அளிக்க வேண்டிய திருமஞ்சன கட்டளைக்கு திருமணம் காது குத்து சீமந்தம் திரட்டி காசுக் கடை, சவுளிக்கடை, எண்ணெய் கடை, செக்கு ஆகியவை மூலம் வசூல் செய்ய வேண்டிய வரிப்பணத்தின் அளவு பற்றியும் மிக விரிவாகக் குறிப்பிடுகிறது. செப்பேட்டின் இறுதியில் 26 கோத்திரமுடைய 56 தேசங்களில் வசிக்கும் ஆயிர வைசியரின் இந்த திருமஞ்சனக் கட்டளைக்கு கேடு விளைவிப்பவர்கள் கங்கைக் கரை யில் காராம்பசுவைக் கொன்ற பாவத்தில் போவார்கள் என்ற சாபத்துடன் இதற்கு ஆதரவு செய்த பேர்கள் அனேக பாவங்களைத் தீர்க்கும் சண்முக நதியில் நீராடி தைப்பூசத் திருநாளில் முருகனை யும் இடும்பாசூரனையும் சேவித்த பலனை பெறுவார்கள் என்றும் குறிப்பிடுகிறது. இச்செப்பேடு மொத்தம் 239 வரிகளில் எழுதப் பட்டுள்ளது.