திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் பொன்னக்கோன்பட்டியில் பல்வேறு கட்சியிலிருந்து விலகிய 10 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். இதற்கு புதிதாக கட்சிக் கிளை உருவாக்கப்பட்டது. கிளைச் செயலாளராக வி.சுப்பிரமணி தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சிதம்பரம், மணப்பாறை வட்டச் செயலாளர் ந.கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.