districts

img

இடிந்து விழும் நிலையில் விஏஓ அலுவலக கட்டிடம்

சீர்காழி, ஜன.19- மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புளியந்துறை கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள விஏஓ அலுவலக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டி கொடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.  கொள்ளிடம் அருகே புளியந்துறை கிராமத்தில் விஏஓ அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.  இதனால் இந்த கட்டிடத்தின் மேற்கூரை பகுதியிலுள்ள காரைகள் பெயர்ந்து விழுந்துள்ளன. மேலும் மேற்கூரை எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.  மேலும் பதிவேடுகள் மழை நீரில் நனைந்து வீணாகிறது.தினந்தோறும் மக்கள் சான்றுகள் பெற இங்கு வந்து செல்கின்றனர். எனவே கிராம மக்கள் பாதுகாப்புக் கருதி இடிந்து விழும் நிலையில் உள்ள புளியந்துறை விஏஓ அலுவலக கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.