அரியலூர், ஆக.22 -
அரியலூர் மாவட்டம், கடுகூர் ஊராட்சிக்குட்பட்ட தலையாரி குடிக்காடு கிராமத்தில் கால்நடை பராம ரிப்புத் துறை சார்பில் மாடுகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமை கடுகூர் ஊராட்சி மன்றத் தலை வர் தர்மலிங்கம் துவக்கி வைத்தார். அரியலூர் கோட்ட உதவி இயக்குநர் சொக்கலிங்கம் முன்னிலையில், மருத்துவக் குழுவினர் 99 மாடுகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசியை செலுத்தினர். மேலும் முகா மில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு தோல் கழலை நோய் குறித்த விழிப்புணர்வு கையேடுகள் வழங்கப்பட்டன.