காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி வ.உ.சி. சாலையில் அமைந்துள்ள கதர் அங்காடியில் தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் திங்கட்கிழமையன்று துவக்கி வைத்தார். முன்னதாக கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் காந்தி சிலைக்கு அமைச்சர் பி.கீதா ஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.