districts

img

மதவெறி சக்திகளைத் தோற்கடிக்க உறுதியேற்போம்!

புதுதில்லி, ஜன.6- உத்தரகண்ட் மாநிலத்தில், மதவெறி  சக்திகளைத் தோற்கடித்திட உறுதியேற் போம் என்றும், ஒரு வலுவான கட்சியைக் கட்டி எழுப்பிடுவோம் என்றும் உத்தர கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 7ஆவது மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடை பெறவிருப்பதையொட்டி அனைத்து மாநிலங்களிலும் மாநில மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. உத்தரகண்ட் மாநிலத்தில் டிசம்பர் 24-26 தேதிகளில் டேராடூன், ஜெயின் தர்மாசாலாவில், தோழர் வீரேந்திர பண்டாரி நகரில், தோழர் சத்யபிரகாஷ் அரங்கில் நடை பெற்றது. டேராடூன் நகரில் மாபெரும் பேரணியுடன் மாநாடு தொடங்கியது. மாநாட்டை, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: மோடி அரசாங்கம் பின்பற்றிவரும் மதவெறிக் கொள்கைகள் மற்றும் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக ஓர் ஒன்றுபட்ட போராட்டத்தை  நடத்திட வேண்டியது அவசியமாகும். மோடி அரசாங்கம், எதிர்க்கட்சி களின் குரலை நசுக்குவதற்காக, அர சாங்கத்தின் புலனாய்வு அமைப்பு களைத் துஷ்பிரயோகம் செய்து வரு கிறது. அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை உணர்வுகளுக்கு எதி ராகவும் செயல்பட்டுவருகிறது. மோடி அரசாங்கத்தின் அரவணை ப்பு இருப்பதன் காரணமாகவே சமீ பத்தில் ஹரித்வாரில் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உணர்வுகளை அவமதித்திடும் விதத்தில் தர்ம சன்சாத் என்னும் மதவெறியர்களின் மாநாடு நடைபெற்றது. இவர்கள் நாடு முழு தும் மதவெறித் தீயை விசிறிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நட வடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் கடுமையாக எதிர்க்கின்றன. மாநிலத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜக-வினை ஆட்சிக் கட்டிலிலிருந்து அகற்றிட இடதுசாரிக் கட்சிகள் செயல்பட வேண்டும் என்றார்.

பிரதிநிதிகள் மாநாடு

மாநாட்டில் மொத்தம் உள்ள 13  மாவட்டங்களில் 10 மாவட்டங்களி லிருந்து தேர்வு செய்யப்பட்ட  150 பிரதிநிதிகள் பங்கேற்றனர். மாநில செயலாளர் ராஜேந்திர நெகி வேலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். மாநாட்டில் மதவெறிக்கு எதிராகவும், தொழிலாளர் நலச் சட்டங் களைத் தொழிலாளர் விரோத சட்டங் களாக மாற்றியிருப்பதற்கு எதிராகவும்,  பெண்கள் பிரச்சனைகள், தலித் பிரச்ச னைகள், விவசாயிகள் பிரச்சனைகள் மற்றும் புதிய கல்விக் கொள்கைக்கு எதி ராகவும் ஒன்பது முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டின் தகுதிகாண் அறிக்கை யின்படி மொத்தம் உள்ள 150 பிரதி நிதிகளில் 21 பேர் பெண்கள். விவசாய சங்கங்களிலிருந்து 58 பேரும், தொழிற் சங்கங்களிலிருந்து 49 பேரும் மாண வர் சங்கத்திலிருந்து 6 பேரும், வாலிபர் சங்கத்திலிருந்து 7 பேரும், மாதர் சங்கத்திலிருந்து 9 பேரும், வழக்கறிஞர் கள் கிளையிலிருந்து 3 பேரும், அறி வியல் இயக்கத்திலிருந்து 2 பேரும் பங்கேற்றனர். சமூகப் பின்னணியைப் பொறுத்த வரை சிறுபான்மையினர் 6, தலித்துகள் 17, பழங்குடியினர் 4, பிற்படுத்தப்பட்ட வர்கள் 7 பேர் பங்கேற்றனர்.25 பேர்  கொண்ட மாநிலக்குழு தேர்ந்தெடுக்கப் பட்டு அது ராஜேந்திர நெகியை மாநில செயலாளராகத் தேர்வு செய்தது.மாநாட்டில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தபன்சென் நிறைவுரை யாற்றினார்.

தீர்மானம்

மாநாட்டில் ஹரித்வாரில் நடை பெற்ற மதவெறியர்களின் நாடாளு மன்ற நிகழ்ச்சியில் முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்த வெறி யர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரும் பிப்ரவரி 23-24 தேதிகளில் நடைபெறவுள்ள அகில இந்திய வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரி வித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (ந.நி.)