புதுக்கோட்டை, செப்.22 - சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்கும் விதமாக மஞ்சப் பையை பயன்படுத்த வலியு றுத்தி புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் வியாழக் கிழமை பேரணியாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். கல்லூரி வளாகத்திலிருந்து தொடங்கிய பேரணியை கல்லூரி முதல்வர் ஜெ.சுகந்தி தொடங்கி வைத்தார். தொடர்ந்து புதுகை பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலை யம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளில் நடை பெற்ற இப்பேரணியில் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு வாசகங்களுடன் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். மேலும், ஆங்காங்கே உள்ள கடை களுக்குச் சென்று நெகிழிப் பைகளினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை விளக்கி, தொடர்ந்து மஞ்சப்பையை பயன்படுத்து மாறு வலியுறுத்தினர். பேரணியில் பேராசிரி யர்கள் பங்கேற்றனர்.