திருமயம், செப்.30 - ஆதிதிராவிடர் மக்களுக்கு அரசால் வழங்கப்பட்ட மனைப் பட்டாவுக்கு வருவாய்க் கணக்கில் பதிவேற்றம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திருமயம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சனிக்கிழமை காத்திருக்கும் போராட் டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகாவில் உள்ள ராயவரம், வாசுகிபுரம் ஆதிதிராவிடர் குடும்பங்கள் 42 பேருக்கு 1995 ஆம் ஆண்டு அரசால் வீட்டு மனைப்பட்டா வழங் கப்பட்டது. இந்த மனைப் பட்டா இதுவரை வரு வாய்க் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட வில்லை. தொடர்ச்சியாக அதிகாரிகளை சந்தித்து முறையிட்டும், எந்த நடவடிக்கையும் இல்லை. இதனைத் தொடர்ந்து மேற்படி 42 பேருக்கு வழங்கப்பட்ட மனைப் பட்டாக்களை உடனடி யாக வருவாய்க் கணக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அப்பகுதியில் கட்டியுள்ள வீடுகள் மற்றும் குடிசைகளுக்கு வீட்டுவரி ரசீது வழங்க வேண்டும். வாழ்வாதாரம் இல்லாத ஏழை பட்டியலினத்தைச் சேர்ந்த 42 குடும் பங்களுக்கும் தாட்கோ மூலம் இலவசமாக வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. பி.சீனிவாசராவ் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற காத்திருக்கும் போராட் டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் டி.சலோமி, செயலாளர் சி.ஜீவானந்தம் ஆகியோர் தலைமை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் எஸ். சங்கர், சிஐடியு மாநிலச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், சிபிஎம், விவசாயிகள், விவசாயத் தொழிலா ளர் சங்க உறுப்பினர்கள் பலர் பேசினர். போராட்டத்தைத் தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தையில், கோரிக்கைகள் குறித்து விரை வில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாட்சியர் புவியரசன் சங்கத் தலை வர்களிடம் எழுத்துப்பூர்வமாக உறுதியளித் தார். இதனைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் எருக்கள் மற்றும் குளக்கரை கிராம மக்களுக்கு இடத்தை அளந்து கொடுத்து பட்டா வழங்கக் கோரி, மாநிலச் செயலாளர் பழ. வாஞ்சி நாதன், மாவட்டத் தலைவர் சி.மேகநாதன், மாவட்டச் செயலாளர் எஸ்.இளங்கோவன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.