districts

அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய சிபிஎம் கோரிக்கை

கும்பகோணம், டிச.25 - கும்பகோணம் மாநகராட்சி யாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட்  24 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. கும்பகோணம் மாநகர மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடி யாக பூர்த்தி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கும்பகோணம் மாநகர  செயலாளர் செந்தில்குமார் தெரிவித்த தாவது: தமிழ்நாட்டின் கோயில் நகரம்  என்றழைக்கப்படும் கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிக அளவு வருமானத்தை தரக்கூடிய நகரமாகும்.  வர்த்தக நிறுவனங்களான மொத்தம்- சில்லறை வணிகமும் அதிக அளவில்  நடைபெறக் கூடிய நகரம். தமிழகத் தில் உள்ள எட்டு பேருந்து கோட்டங் களில் கும்பகோணத்தை தலைமையிட மாகக் கொண்டு அரசு போக்குவரத்து கழகம், கும்பகோணம் கோட்டம், ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத் தின் காவிரி டெல்டா மாவட்ட தலைமை  அலுவலகமும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையும், மாவட்ட தலைமையகத்திற்கு தேவை யான பதிவாளர்

அலுவலகம், வட்டார  போக்குவரத்து அலுவலகம், கல்வி  மாவட்டம் போன்ற முக்கிய அலுவல கங்கள் தற்போது இயங்கி வருகின்றன. அதேபோல் தஞ்சை மாவட்டத் திலேயே வர்த்தக கேந்திரமாக கும்பகோ ணம் விளங்குவதால் தஞ்சைக்கு முன்னரே கும்பகோணத்தில் வருமான வரித்துறை அலுவலகம் தொடங்கப்பட் டுள்ளது. காவிரி ஆற்றுக்கு  இடையே இந்த ஊர் அமைந்துள்ளது. கும்பகோணம் 1866 ஆம் ஆண்டு முதல் நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. 4.96 சதுர மைல் பரப்பளவு கொண்ட  கும்பகோணம், 2011 ஆம் ஆண்டு  கணக்கின்படி 1,40,113 பேர் 45 வார்டு களில் வசித்து வருகின்றனர். 1866 ஆம் ஆண்டு மூன்றாம் நிலை யாகவும், 1949 ஆம் ஆண்டிலிருந்து முதல் நிலையாகவும், 1974 ஆம் ஆண்டி லிருந்து தேர்வு நிலை நகராட்சியாகவும், 1998 ஆம் ஆண்டு முதல் சிறப்பு  நிலை நகராட்சியாகவும் செயல்பட்டு  வருகிறது. கல்விக்கு முக்கியத்து வம் அளிக்கும் வகையில் நகராட்சி நிர்வா கம் சார்பில் ஒரு மேல்நிலைப் பள்ளி, 4 நடுநிலைப் பள்ளிகளும் 13 தொடக்கப் பள்ளிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

அதேபோல் மூன்று மருத்துவ மனைகளும் இயங்குகின்றன. 2009 ஆம் ஆண்டில் இருந்து புதை சாக்கடைத்  திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. கும்பகோணம் நகராட்சியை  மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என கடந்த 2013 ஆம் ஆண்டு நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றி தமிழக அரசுக்கு அனுப்பப் பட்டது. தஞ்சாவூர் நகராட்சி கடந்த 2014 ஆம்  ஆண்டு முதல் மாநகராட்சி தரம்  உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் தற்போது நகராட்சியாக இருந்த கும்பகோணம் மாநகராட்சியாக தரம்  உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளதை அடுத்து, ஒரே மாவட்டத்தில்  இரு மாநகராட்சியாக இடம்பெற்றது.  இந்நிலையில் தமிழக அரசு கும்பகோ ணத்தை மாநகராட்சியாக அறிவித்த தற்கு ஆணை வெளியிடப்பட்டது.  இந்த அரசாணையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  வரவேற்பதுடன், மாநகராட்சிக்கென ஒதுக்கப்படும் கூடுதல் நிதியை கும்ப கோணத்தில் மக்களின் அன்றாட பிரச்சனைகளான சாலை, பாதாள சாக்கடை சுகாதாரப் பணிகள்  மேலும் அடிப்படை வசதிகளை தீவிர நடவடிக்கையாக செய்து தர வேண்டும்.  பாதாள சாக்கடை கழிவு நீரை அப்புறப் படுத்த நிரந்தரமான திட்டத்தை வகுக்க  வேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.