திருச்சிராப்பள்ளி, ஆக.12 -
திருச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்த மான, பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறுகள், திறந்த வெளி கிணறுகள், கட்டுமானக் குழிகள், குவாரி மற்றும் சுரங்ககுழிகள் ஆகியவற்றை கண்டறிந்து பொதுமக்கள் மற்றும் விலங்குகளுக்கு ஆபத்துகள் ஏற்படா வண்ணம் அவற்றை அகற்றுவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கை கள் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும்.
இதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்ப்பதற்கு இந்நடவடிக்கை அவசியமாகிறது. தேசிய நெடுஞ்சாலை களில் பயணம் செய்வோரின் பாதுகாப்பிற்காக தடுப்பு அரண்கள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் அமைப்பது மிகவும் அவசியமான பணியாகும். தொடர்புடைய அலுவலர்கள் மேல் குறிப்பிட்டவைகளை கண்டறிந்து உடனடியாக நடவ டிக்கை மேற்கொண்டு, பயன்பாடில்லா ஆழ்துளை கிணறு களை மூடி, பயன்பாடற்ற திறந்தவெளி கிணறுகளுக்கு பாது காப்பான முறையில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.
மேலும் கட்டுமான குழிகள் மற்றும் குவாரி, சுரங்க குழிகள் அருகே பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டி களுக்கு தெரியும் வகையில் அறிவிப்பு பலகைகள் அமைக்க வேண்டும். பயன்படுத்தப்படாத குவாரிகளில் தேங்கியுள்ள நீர்நிலைகளில் எச்சரிக்கை பலகைகள் அமைத்து கண்கா ணிக்க வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.