“விடுதலைப் போராட்ட வீரர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர், சமத்துவ சமூகம் அமைய காலமெல்லாம் பாடு பட்ட தோழர் என். சங்கரய்யா அவர்களுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நெஞ்சார்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறது. பொதுவாழ்வில் எளிமைக்கும் அர்ப்ப ணிப்புக்கும் எடுத்துக் காட்டாக திகழ்ந்த வர். 8 ஆண்டு காலம் சிறைவாசம் அனுப வித்தவர். மூன்று முறை சட்ட மன்ற உறுப்பினர் ஆக இருந்து மக்களின் குரலை சமரசமின்றி எதிரொலித்தவர். சமூக ஒடுக்குமுறை எதிர்ப்புக் களத்தில் தோழர் சங்கரய்யா பங்களிப்பு முக்கியமா னது. தென் மாவட்ட கலவரங்களின் போது மக்கள் ஒற்றுமையை மட்டும் இயந்திர கதி யாக பேசாமல், தீண்டாமை ஒழிப்பையும் இணைத்து கம்யூனிச இயக்கத்தின் தனித்துவ பார்வையை பதிவு செய்தவர். தமிழ்நாடு முழுவதும் அனைத்துக் கட்சிகளையும் இணைத்து சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக மனித சங்கிலி, பொதுக் கூட்டங்கள் என அன்றைய தமி ழக முதல்வர் டாக்டர் கலைஞர் பங்கேற்பு டன் பொதுச் சமூகத்தின் உரையாடல் களை உறுதி செய்ததில் இவரது முன் முயற்சி குறிப்பிடத்தக்கது. சமத்துவபுரங்க ளை தமிழ்நாடு அரசும் அறிவித்தது. தோழர் என். சங்கரய்யா தன் சொந்த குடும்பத்தையும் சமத்துவபுரமாக வைத்தி ருந்தார். சாதி மறுப்பு திருமணங்களை தன் குடும்பம், உறவுகளுக்குள் நடத்தினார். சாதி ஆதிக்க சக்திகள் அகமண முறைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் காலத்தில், சாதி மறுப்புத் திருமணங்களுக்கு ஆதர வாக இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். சாதி ஆணவக் கொலைகளு க்கு எதிரான சிறப்புச் சட்டம் கோரி சேலம் முதல் சென்னை வரை நடத்தப்பட்ட 400 கி.மீ. நடைபயணத்தை தாம்பரத்தில் வர வேற்று அவர் ஆற்றிய உரை இன்னமும் செவிகளில் எதிரொலிக்கிறது. இத்தகைய மகத்தான தலைவருக்கு நாம் செலுத்துகிற அஞ்சலி சாதி ஒழிப்பு லட்சியத்தை இணைத்து வர்க்க பேதமற்ற சமூகம் அமைய பாடுபடுவதே ஆகும். தோழர் என்.சங்கரய்யா வழியில் பயணிப்போம். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நெஞ்சார்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறது.”
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் தா.செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் இருந்து