districts

img

ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட் விளக்க பிரச்சாரம்

புதுச்சேரி, பிப்.13-  ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. ஒன்றிய பாஜக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகவும்,ஏழை எளிய  நடுத்தர மக்களுக்கு எதிராக உள்ளது.தொடர்ந்து புதுச்சேரி மக்களுக்கு எந்த திட்டமும் பட்ஜெட்டில் இடம் பெறாத நிலையில் மக்களை வஞ்சித்து உள்ள பாஜக அரசை கண்டித்து பிரச்சாரம் நடைபெற்றது. புதுச்சேரி காமராஜர் சிலை எதிரே துவங்கிய பிரச்சாரத்திற்கு சிபிஎம் நகரச் செயலாளர் ஜோதிபாசு தலைமை தாங்கினார். சிபிஎம் மாநிலச் செயலாளர் ராமச்சந்திரன் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். நேரு வீதி, காந்தி வீதி வழியாக ஈஸ்வரன் கோவில் அருகில் நிறைவடைந்த பிரச்சாரத்தில்,  கட்சியின் மூத்த தலைவர்  தா. முருகன், செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராஜாங்கம்,சீனுவாசன், .கொளஞ்சியப்பன் ,கலியமூர்த்தி,சத்தியா, மாநில குழு உறுப்பினர்கள் ராமசாமி, மதிவாணன்,  சரவணன், ஆனந்த், சஞ்சய் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.